173
உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
174
ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்: உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
175
உயிர்பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
176
காணாமல்போன ஆட்டைப்போல் நான் அலைந்து திரிகின்றேன்: உம் ஊழியனைத் தேடிப்பாரும்: ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.