19
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை: விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20
நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை: என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.
21
நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுற் காண்கிறேன்,
22
நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்@ர மகிழ்ச்சியடைகிறேன்.
23
ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்: என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது: என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
24
அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?