1 | அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? | கலா 3:3 உபா 32:6 1சாமு 13:13 மத் 7:26 லூக் 24:25 எபே 5:15 1தீமோ 6:4 |
2 | உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? | கலா 3:5 கலா 3:14 அப் 2:38 அப் 8:15 அப் 10:44-47 அப் 11:15-18 அப் 15:8 அப் 19:2-6 1கொரி 12:7-13 2கொரி 11:4 எபே 1:13 எபே 1:14 எபிரெ 2:4 எபிரெ 6:4 1பேது 1:12 |
3 | தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? | கலா 4:7-10 கலா 5:4-8 கலா 6:12-14 எபிரெ 7:16-19 எபிரெ 9:2 எபிரெ 9:9 எபிரெ 9:10 |
4 | நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத் தான் முடியுமா? | எசே 18:24 எபிரெ 6:4-6 எபிரெ 10:32-39 2பேது 2:20-22 2யோவா 1:8 |
5 | உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடயே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? | கலா 3:2 2கொரி 3:8 |
6 | ஆபிரகாமைப் பாருங்கள்! “அவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்: அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.” | கலா 3:9 ஆதி 15:6 ரோம 4:3-6 ரோம 4:9-6 ரோம 4:10-6 ரோம 4:21-6 ரோம 4:22-6 ரோம 9:32 ரோம 9:33 யாக் 2:23 |
7 | ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். | சங் 100:3 லூக் 21:31 எபிரெ 13:23 |
8 | நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், “உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. | கலா 3:22 கலா 4:30 யோவா 7:38 யோவா 7:42 யோவா 19:37 ரோம 9:17 2தீமோ 3:15-17 |
9 | ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்குபெறுவர். | கலா 3:7 கலா 3:8 கலா 3:14 கலா 3:29 கலா 4:28 ரோம 4:11 ரோம 4:16 ரோம 4:24 |
10 | திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்: ஏனெனில், “திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!” என்று எழுதியுள்ளது. | கலா 2:16 லூக் 18:9-13 ரோம 4:15 ரோம 7:9-13 ரோம 8:7 |
11 | சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.” | கலா 2:16 1இரா 8:46 யோபு 9:3 யோபு 40:4 யோபு 42:6 சங் 19:12 சங் 130:3 சங் 130:4 சங் 143:2 பிரச 7:20 ஏசா 6:5 ஏசா 53:6 ஏசா 64:6 யாக் 3:2 1யோவா 1:8-10 வெளிப் 5:9 வெளிப் 7:14 வெளிப் 7:15 |
12 | திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, “சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று எழுதியுள்ளது. | ரோம 4:4 ரோம 4:5 ரோம 4:14 ரோம 4:16 ரோம 9:30-32 ரோம 10:5 ரோம 10:6 ரோம 11:6 |
13 | “மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்” என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். | கலா 3:10 கலா 4:5 ஏசா 55:5-7 ஏசா 55:10-12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 26:28 ரோம 3:24-26 ரோம 4:25 ரோம 8:3 ரோம 8:4 2கொரி 5:21 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 7:26 எபிரெ 7:27 எபிரெ 9:12 எபிரெ 9:15 எபிரெ 9:26 எபிரெ 9:28 எபிரெ 10:4-10 1பேது 1:18-21 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9 வெளிப் 13:8 |
14 | ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார். | கலா 3:6-9 கலா 3:29-9 ஆதி 12:2 ஆதி 12:3 ஏசா 41:8 ஏசா 51:2 ஏசா 51:3 ரோம 4:3-17 |
15 | சகோதர சகோதரிகளே. உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக் காட்டுத் தருகிறேன். மனிதர் முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை யாரும் செல்லாததாக்கவோ அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது. | ரோம 6:19 1கொரி 15:32 |
16 | வாக்குறுதிகள்ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன. பலரைக் குறிக்கும் முறையில் “வழி மரபினர்களுக்கு” என்று இல்லாமல் ஒருவரையே குறிக்கும் முறையில் “உன் மரபினருக்கு” என்று உள்ளது. அந்த மரபினர் கிறிஸ்துவே. | கலா 3:8 ஆதி 12:3 ஆதி 12:7 ஆதி 13:15 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 21:12 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:13 ஆதி 28:14 ஆதி 49:10 |
17 | என் கருத்து இதுவே: கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிட முடியாது: அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் முடியாது. | கலா 5:16 1கொரி 1:12 1கொரி 7:29 1கொரி 10:19 2கொரி 9:6 எபே 4:17 கொலோ 2:4 |
18 | திருச்சட்டம் சார்ந்த செயல்களால் உரிமைப்பேறு கிடைப்பதாய் இருந்தால் அது வாக்குறுதியால் தரப்படுவது இல்லை என்றாகிறது. ஆனால் கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார். | கலா 3:10 கலா 3:12 கலா 3:26 கலா 3:29 கலா 2:21 ரோம 4:13-16 ரோம 8:17 |
19 | அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன? குற்றங்களை எடுத்துக்காட்ட அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்கள் மூலம் அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்க் கொடுக்கப்பட்டது. | ரோம 3:1 ரோம 3:2 ரோம 7:7-13 |
20 | நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார். | யோபு 9:33 அப் 12:20 1தீமோ 2:5 |
21 | அப்படியானால், திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகியிருக்கலாம். | மத் 5:17-20 ரோம 3:31 ரோம 7:7-13 |
22 | ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. | கலா 3:8-10 கலா 3:23-10 சங் 143:2 ரோம 3:9-20 ரோம 3:23-20 ரோம 5:12 ரோம 5:20 ரோம 11:32 |
23 | நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. | கலா 3:19 கலா 3:24 கலா 3:25 கலா 4:1-4 எபிரெ 12:2 |
24 | இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. | கலா 3:25 கலா 2:19 கலா 4:2 கலா 4:3 மத் 5:17 மத் 5:18 அப் 13:38 அப் 13:39 ரோம 3:20-22 ரோம 7:7-9 ரோம 7:24-9 ரோம 7:25-9 ரோம 10:4 கொலோ 2:17 எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 9:8-16 எபிரெ 10:1-14 |
25 | இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. | கலா 4:1-6 ரோம 6:14 ரோம 7:4 எபிரெ 7:11-19 எபிரெ 8:3-13 எபிரெ 10:15-18 |
26 | ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். | கலா 4:5 கலா 4:6 யோவா 1:12 யோவா 1:13 யோவா 20:17 ரோம 8:14-17 2கொரி 6:18 எபே 1:5 எபே 5:1 பிலிப் 2:15 எபிரெ 2:10-15 1யோவா 3:1 1யோவா 3:2 வெளிப் 21:7 |
27 | அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். | மத் 28:19 மத் 28:20 மாற் 16:15 மாற் 16:16 அப் 2:38 அப் 8:36-38 அப் 9:18 அப் 16:15 அப் 16:31-33 ரோம 6:3 ரோம 6:4 1கொரி 12:13 கொலோ 2:10-12 1பேது 3:21 |
28 | இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். | கலா 5:6 ரோம 1:16 ரோம 2:9 ரோம 2:10 ரோம 3:29 ரோம 3:30 ரோம 4:11 ரோம 4:12 ரோம 9:24 ரோம 10:12-15 1கொரி 7:19 1கொரி 12:13 எபே 3:5-10 கொலோ 3:11 |
29 | நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள். | கலா 5:24 1கொரி 3:23 1கொரி 15:23 2கொரி 10:7 |