1 | அப்படியானால், இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? | ரோம 6:1 ரோம 7:7 ரோம 8:31 |
2 | தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு: ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. | ரோம 3:20-28 பிலிப் 3:9 |
3 | ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன?”ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்: அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.” | ரோம 9:17 ரோம 10:11 ரோம 11:2 ஏசா 8:20 மாற் 12:10 யாக் 4:5 2பேது 1:20 2பேது 1:21 |
4 | வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை: அது அவர்கள் உரிமை. | ரோம 9:32 ரோம 11:6 ரோம 11:35 மத் 20:1-16 |
5 | தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருகிறார். | ரோம 4:24 ரோம 4:25 ரோம 3:22 ரோம 5:1 ரோம 5:2 ரோம 10:3 ரோம 10:9 ரோம 10:10 அப் 13:38 அப் 13:39 கலா 2:16 கலா 2:17 கலா 3:9-14 பிலிப் 3:9 |
6 | அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்: | ரோம 4:9 உபா 33:29 சங் 1:1-3 சங் 112:1 சங் 146:5 சங் 146:6 மத் 5:3-12 கலா 3:8 கலா 3:9 கலா 3:14 கலா 4:15 எபே 1:3 |
7 | “எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர். | சங் 32:1 சங் 32:2 சங் 51:8 சங் 51:9 சங் 85:2 சங் 130:3 சங் 130:4 ஏசா 40:1 ஏசா 40:2 எரே 33:8 எரே 33:9 மீகா 7:18-20 மத் 9:2 லூக் 7:47-50 |
8 | ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறு பெற்றவர்.” | ஏசா 53:10-12 2கொரி 5:19-20 பிலேமோ 1:18 பிலேமோ 1:19 1பேது 2:24 1பேது 3:18 |
9 | பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா? செய்யாதோரும் கூடவா?”ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்: அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்றோமே. | ரோம 3:29 ரோம 3:30 ரோம 9:23 ரோம 9:24 ரோம 10:12 ரோம 10:13 ரோம 15:8-19 ஏசா 49:6 லூக் 2:32 கலா 3:14 கலா 3:26-28 எபே 2:11-13 எபே 3:8 கொலோ 3:11 |
10 | அவர் எந்த நிலையில் இருந்தபோது கடவுள் அவ்வாறு கருதினார்? விருத்தசேனம் செய்துகொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா? விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையில் அல்ல: செய்து கொள்ளாத நிலையில்தான். | ஆதி 15:5 ஆதி 15:6 ஆதி 15:16 ஆதி 16:1-3 ஆதி 17:1 ஆதி 17:10 ஆதி 17:23-27 1கொரி 7:18 1கொரி 7:19 கலா 5:6 கலா 6:15 |
11 | விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்: அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார். | ஆதி 17:10 யாத் 12:13 யாத் 31:13 யாத் 31:17 எசே 20:12 எசே 20:20 |
12 | அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும், அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் அவர் தந்தையானார்: எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல, இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள். | ரோம 9:6 ரோம 9:7 மத் 3:9 லூக் 16:23-31 யோவா 8:39 யோவா 8:40 கலா 4:22-31 |
13 | உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை: நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. | ஆதி 12:3 ஆதி 17:4 ஆதி 17:5 ஆதி 17:16 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 28:14 ஆதி 49:10 சங் 2:8 சங் 72:11 |
14 | ஏனெனில் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின், நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்: அந்த வாக்குறுதியும் செல்லாததாகும். | ரோம 4:16 கலா 2:21 கலா 3:18-24 கலா 5:4 பிலிப் 3:9 எபிரெ 7:19 எபிரெ 7:28 |
15 | திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது. | ரோம 1:17 ரோம 2:5 ரோம 2:6 ரோம 3:19 ரோம 3:20 ரோம 5:13 ரோம 5:20 ரோம 5:21 ரோம 7:7-11 எண் 32:14 உபா 29:20-28 2இரா 22:13 எரே 4:8 புலம் 2:22 எசே 7:19 செப் 1:18 யோவா 3:36 யோவா 15:22 அப் 17:30 அப் 17:31 1கொரி 15:56 2கொரி 3:7-9 கலா 3:10 கலா 3:19 எபே 5:6 கொலோ 3:6 1யோவா 3:4 வெளிப் 6:16 வெளிப் 6:17 வெளிப் 19:15 |
16 | ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும்-திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும்-உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. | ரோம 3:24-26 ரோம 5:1 கலா 3:7-12 கலா 3:22-12 எபே 2:5 எபே 2:8 தீத் 3:7 |
17 | ஏனெனில்”எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். | ஆதி 17:4 ஆதி 17:5 ஆதி 17:16 ஆதி 17:20 ஆதி 25:1-34 ஆதி 28:3 எபிரெ 11:12 |
18 | “உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்: தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். | ரோம 4:19 ரோம 5:5 ரோம 8:24 ரூத் 1:11-13 நீதி 13:12 எசே 37:11 மாற் 5:35 மாற் 5:36 லூக் 1:18 அப் 27:25 |
19 | தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை: | ரோம 4:20 ரோம 4:21 ரோம 14:21 மத் 6:30 மத் 8:26 மத் 14:31 மாற் 9:23 மாற் 9:24 யோவா 20:27 யோவா 20:28 |
20 | கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை: நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்: கடவுளைப் பெருமைப்படுத்தினார். | எண் 11:13-23 2இரா 7:2 2இரா 7:19 2நாளா 20:15-20 ஏசா 7:9 எரே 32:16-27 லூக் 1:18 லூக் 1:45 |
21 | தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். | ரோம 8:38 2தீமோ 1:12 எபிரெ 11:13 |
22 | ஆகவே”அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.” | ரோம 4:3 ரோம 4:6 |
23 | “நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை: | ரோம 15:4 1கொரி 9:10 1கொரி 10:6 1கொரி 10:11 2தீமோ 3:16 2தீமோ 3:17 |
24 | நம்மையும் குறிக்கின்றது: இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம். | அப் 2:39 |
25 | நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்: நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார். | ரோம 3:25 ரோம 5:6-8 ரோம 8:3 ரோம 8:32 ஏசா 53:5 ஏசா 53:6 ஏசா 53:10-12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 20:28 1கொரி 15:3 1கொரி 15:4 2கொரி 5:21 கலா 1:4 கலா 3:13 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 9:28 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 4:9 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9 வெளிப் 7:14 |