3
“ ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4
துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5
கனிவுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
7
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
11
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.