இணை வசன வேதாகமம்

Click to Subscribe

வெளிப்படுத்தல் 22

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.சங் 36:8 சங் 46:4 ஏசா 41:18 ஏசா 48:18 ஏசா 66:12 எசே 47:1-9 சகரி 14:8 யோவா 7:38 யோவா 7:39
2நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.வெளிப் 22:1 வெளிப் 21:21 எசே 47:1 எசே 47:12
3இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.வெளிப் 21:4 உபா 27:26 சகரி 14:11 மத் 25:41 ஆதி 3:10-13 எசே 37:27
4அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.எசே 33:18-20 எசே 33:23-20 யோபு 33:26 சங் 4:6 ஏசா 33:17 ஏசா 35:2 ஏசா 40:5 மத் 5:8 யோவா 12:26 யோவா 17:24 1கொரி 13:12 எபிரெ 12:14 1யோவா 3:2 1யோவா 3:3
5அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.வெளிப் 18:23 வெளிப் 21:22-25 சங் 36:9 சங் 84:11 நீதி 4:18 நீதி 4:19 ஏசா 60:19 ஏசா 60:20
6பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.வெளிப் 19:9 வெளிப் 21:5
7இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.வெளிப் 22:10 வெளிப் 22:12 வெளிப் 22:20 வெளிப் 3:11
8யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.வெளிப் 19:10 வெளிப் 19:19
9அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.வெளிப் 19:10 உபா 4:19 கொலோ 2:18 கொலோ 2:19 1யோவா 5:20
10பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.வெளிப் 22:12 வெளிப் 22:13 வெளிப் 22:16 வெளிப் 22:20
11அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.வெளிப் 16:8-11 வெளிப் 16:21-11 சங் 81:12 நீதி 1:24-33 நீதி 14:32 பிரச 11:3 எசே 3:27 தானி 12:10 மத் 15:14 மத் 21:19 மத் 25:10 யோவா 8:21 2தீமோ 3:13
12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.வெளிப் 22:7 செப் 1:14
13நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 21:6 ஏசா 41:4 ஏசா 44:6 ஏசா 48:12
14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.வெளிப் 22:7 சங் 106:3-5 சங் 112:1 சங் 119:1-6 ஏசா 56:1 ஏசா 56:2 தானி 12:12 மத் 7:21-27 லூக் 12:37 லூக் 12:38 யோவா 14:15 யோவா 14:21-23 யோவா 15:10-14 1கொரி 7:19 கலா 5:6 1யோவா 3:3 1யோவா 3:23 1யோவா 3:24 1யோவா 5:3
15நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.வெளிப் 9:20 வெளிப் 9:21 வெளிப் 21:8 வெளிப் 21:27 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபே 5:3-6 கொலோ 3:6
16சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.வெளிப் 22:6 வெளிப் 1:1
17ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.வெளிப் 22:16 ஏசா 55:1-3 யோவா 16:7-15
18இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.வெளிப் 22:16 வெளிப் 3:14 எபே 4:17 1தெச 4:6
19ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.வெளிப் 2:18 லூக் 11:52
20இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.வெளிப் 22:18
21நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.வெளிப் 1:4 ரோம 1:7 ரோம 16:20 ரோம 16:24 2கொரி 13:14 எபே 6:23 எபே 6:24 2தெச 3:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.