இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எரேமியா 51

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,எரே 50:9 எரே 50:14-16 எரே 50:21-16 ஏசா 13:3-5 ஆமோ 3:6
2தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்.எரே 15:7 ஏசா 41:16 எசே 5:12 மத் 3:12
3வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.எரே 50:14 எரே 50:41 எரே 50:42
4குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.எரே 49:26 எரே 50:30 எரே 50:37 ஏசா 13:15 ஏசா 14:19
5அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.எரே 33:24-26 எரே 46:28 எரே 50:4 எரே 50:5 எரே 50:20 1சாமு 12:22 1இரா 6:13 எஸ்றா 9:9 சங் 94:14 ஏசா 44:21 ஏசா 49:14 ஏசா 49:15 ஏசா 54:3-11 ஏசா 62:12 ஓசி 1:10 ஆமோ 9:8 ஆமோ 9:9 ரோம 11:1 ரோம 11:2
6நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.எரே 51:9 எரே 51:45 எரே 51:50 எரே 50:8 எரே 50:28 ஏசா 48:20 சகரி 2:6 சகரி 2:7 வெளிப் 18:4
7பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.ஏசா 14:4 தானி 2:32 தானி 2:38 வெளிப் 17:4
8பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.எரே 51:41 எரே 50:2 ஏசா 21:9 ஏசா 47:9 வெளிப் 14:8 வெளிப் 18:2 வெளிப் 18:8
9பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாய மண்டலங்கள் பரியந்தம் எட்டினது.எரே 8:20 எரே 46:16 எரே 46:21 எரே 50:16 ஏசா 13:14 ஏசா 47:15 மத் 25:10-13
10கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.சங் 37:6 மீகா 7:9 மீகா 7:10
11அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.எரே 46:4 எரே 46:9 எரே 50:9 எரே 50:14 எரே 50:25 எரே 50:28 எரே 50:29 ஏசா 21:5
12பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.எரே 46:3-5 நீதி 21:30 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 13:2 யோவே 3:2 யோவே 3:9-14 நாகூ 2:1 நாகூ 3:14 நாகூ 3:15
13திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.எரே 51:36 வெளிப் 17:1 வெளிப் 17:15
14மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.எரே 49:13 ஆமோ 6:8 எபிரெ 6:13
15அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.எரே 10:12-16 எரே 32:17 ஆதி 1:1-6 சங் 107:25 சங் 146:5 சங் 146:6 சங் 148:1-5 ஏசா 40:26 அப் 14:15 அப் 17:24 ரோம 1:20 கொலோ 1:16 கொலோ 1:17 எபிரெ 1:2 எபிரெ 1:3 வெளிப் 4:11
16அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.எரே 10:12 எரே 10:13 யோபு 37:2-11 யோபு 40:9 சங் 18:13 சங் 29:3-10 சங் 46:6 சங் 68:33 சங் 104:7 எசே 10:5
17மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.எரே 10:14 சங் 14:2 சங் 53:1 சங் 53:2 சங் 92:5 சங் 92:6 சங் 115:5 சங் 115:8 சங் 135:18 ஏசா 44:18-20 ரோம 1:20-23 1கொரி 1:19-21
18அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.எரே 10:8 எரே 10:15 யோனா 2:8 அப் 14:15
19யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.எரே 10:16 சங் 16:5 சங் 73:26 சங் 115:3 புலம் 3:24
20நீ எனக்கு தண்டாயுதம் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.எரே 50:23 ஏசா 10:5 ஏசா 10:15 ஏசா 13:5 ஏசா 14:5 ஏசா 14:6 ஏசா 37:26 ஏசா 41:15 ஏசா 41:16 மீகா 4:13 சகரி 9:13 சகரி 9:14 மத் 22:7
21உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.எரே 50:37 யாத் 15:1 யாத் 15:21 சங் 46:9 சங் 76:6 எசே 39:20 மீகா 5:10 நாகூ 2:13 ஆகா 2:22 சகரி 10:5 சகரி 12:4 வெளிப் 19:18
22உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.எரே 6:11 உபா 32:25 1சாமு 15:3 2நாளா 36:17 ஏசா 20:4 புலம் 2:11 எசே 9:6
23உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
24பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 51:11 எரே 51:35 எரே 51:49 எரே 50:15 எரே 50:17 எரே 50:18 எரே 50:28 எரே 50:29 எரே 50:33 எரே 50:34 சங் 137:8 சங் 137:9 ஏசா 47:6-9 ஏசா 51:22 ஏசா 51:23 ஏசா 61:2 ஏசா 63:1-4 ஏசா 66:6 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 6:10 வெளிப் 18:20 வெளிப் 18:24 வெளிப் 19:2-4
25இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 50:31
26மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 51:37 எரே 51:43 எரே 50:12 எரே 50:13 ஏசா 13:19-22 ஏசா 14:23
27தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரக்கூப்பிடுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.எரே 51:12 எரே 6:1 எரே 50:2 எரே 50:41 ஏசா 13:2-5 ஏசா 18:3 ஆமோ 3:6 சகரி 14:2
28மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.எரே 51:11 எரே 25:25 ஆதி 10:2 1நாளா 1:5
29அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.எரே 8:16 எரே 10:10 எரே 50:36 எரே 50:43 ஏசா 13:13 ஏசா 13:14 ஏசா 14:16 யோவே 2:10 ஆமோ 8:8
30பாபிலோன் பராக்கிரம்சாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.எரே 51:32 எரே 51:57 எரே 48:41 எரே 50:36 எரே 50:37 சங் 76:5 ஏசா 13:7 ஏசா 13:8 ஏசா 19:16 நாகூ 3:13 வெளிப் 18:10
31கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்தமனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,எரே 4:20 எரே 50:24 1சாமு 4:12-18 2சாமு 18:19-31 2நாளா 30:6 எஸ்தர் 3:13-15 எஸ்தர் 8:10 எஸ்தர் 8:14 யோபு 9:25
32அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.எரே 50:38 ஏசா 44:27
33பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப் போரடிக்குங் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.ஏசா 21:10 ஏசா 41:15 ஏசா 41:16 ஆமோ 1:3 மீகா 4:13 ஆபகூ 3:12
34பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.எரே 51:49 எரே 39:1-8 எரே 50:7 எரே 50:17 புலம் 1:1 புலம் 1:14 புலம் 1:15
35எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.எரே 50:29 நியா 9:20 நியா 9:24 நியா 9:56 நியா 9:57 சங் 9:12 சங் 12:5 சங் 137:8 சங் 137:9 ஏசா 26:20 ஏசா 26:21 சகரி 1:15 மத் 7:2 யாக் 2:13 வெளிப் 6:10 வெளிப் 16:6 வெளிப் 18:6 வெளிப் 18:20
36ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.எரே 50:33 எரே 50:34 சங் 140:12 நீதி 22:23 நீதி 23:11 ஏசா 43:14 ஏசா 47:6-9 ஏசா 49:25 ஏசா 49:26 மீகா 7:8-10 ஆபகூ 2:8-17
37அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.எரே 51:25 எரே 51:26 எரே 51:29 எரே 25:9 எரே 25:12 எரே 25:18 எரே 50:12 எரே 50:13 எரே 50:23-26 எரே 50:38-40 ஏசா 13:19-22 ஏசா 14:23 ஏசா 34:8-17 வெளிப் 18:2 வெளிப் 18:21-23
38ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.எரே 2:15 யோபு 4:10 யோபு 4:11 சங் 34:10 சங் 58:6 ஏசா 35:9 நாகூ 2:11-13 சகரி 11:3
39அவர்கள் களிக்கும் சமயத்திலே நான்அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 25:27 ஏசா 21:4 ஏசா 21:5 ஏசா 22:12-14 தானி 5:1-4 தானி 5:30-4 நாகூ 1:10 நாகூ 3:11
40அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப்பண்ணுவேன்.எரே 50:27 சங் 37:20 சங் 44:22 ஏசா 34:6 எசே 39:18
41சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி?எரே 25:26 தானி 5:1-3
42சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.சங் 18:4 சங் 18:16 சங் 42:7 சங் 65:7 சங் 93:3 ஏசா 8:7 ஏசா 8:8 எசே 27:26-34 தானி 9:26 லூக் 21:25 வெளிப் 17:15 வெளிப் 17:16
43அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.எரே 51:29 எரே 51:37 எரே 50:39 எரே 50:40
44நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.எரே 51:18 எரே 51:47 எரே 50:2 ஏசா 46:1 ஏசா 46:2
45என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.எரே 51:6 எரே 51:9 எரே 51:50 எரே 50:8 ஏசா 48:20 சகரி 2:7 வெளிப் 14:8-11 வெளிப் 18:4
46உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.2இரா 19:7 மத் 24:6-8 மாற் 13:7 மாற் 13:8 லூக் 21:9-19 லூக் 21:28-19
47ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.எரே 51:52 எரே 50:2 ஏசா 21:9 ஏசா 46:1 ஏசா 46:2
48வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 51:10 சங் 58:10 சங் 58:11 நீதி 11:10 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:13 வெளிப் 15:1-4 வெளிப் 16:4-7 வெளிப் 18:20 வெளிப் 19:1-7
49பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.எரே 51:10 எரே 51:11 எரே 51:24 எரே 51:35 எரே 50:11 எரே 50:17 எரே 50:18 எரே 50:29 எரே 50:33 எரே 50:34 நியா 1:7 சங் 137:8 சங் 137:9 மத் 7:2 யாக் 2:13 வெளிப் 18:5 வெளிப் 18:6
50பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.எரே 51:6 எரே 51:45 எரே 31:21 எரே 44:28 எரே 50:8 ஏசா 48:20 ஏசா 51:11 ஏசா 52:2 ஏசா 52:11 ஏசா 52:12 சகரி 2:7-9 வெளிப் 18:4
51நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.எரே 3:22-25 எரே 31:19 சங் 74:18-21 சங் 79:4 சங் 79:12 சங் 123:3 சங் 123:4 சங் 137:1-3 புலம் 2:15-17 புலம் 5:1 எசே 36:30
52ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.எரே 51:47 எரே 50:38
53பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 51:25 எரே 51:58 எரே 49:16 ஆதி 11:4 சங் 139:8-10 ஏசா 14:12-15 ஏசா 47:5 ஏசா 47:7 எசே 31:9-11 தானி 4:30 ஆமோ 9:4 ஒபதி 1:3 ஒபதி 1:4
54பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.எரே 48:3-5 எரே 50:22 எரே 50:27 எரே 50:43 எரே 50:46 ஏசா 13:6-9 ஏசா 15:5 செப் 1:10 வெளிப் 18:17-19
55கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.எரே 51:38 எரே 51:39 எரே 25:10 எரே 50:10-15 ஏசா 15:1 ஏசா 24:8-11 ஏசா 47:5 வெளிப் 18:22 வெளிப் 18:23
56பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.எரே 51:48 எரே 50:10 ஏசா 21:2 ஆபகூ 2:8 வெளிப் 17:16
57அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.எரே 51:39 எரே 25:27 ஏசா 21:4 ஏசா 21:5 தானி 5:1-4 தானி 5:30-4 தானி 5:31-4 நாகூ 1:10 ஆபகூ 2:15-17 வெளிப் 18:6 வெளிப் 18:7 வெளிப் 18:9
58பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.எரே 51:44 எரே 50:15
59பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.எரே 32:12 எரே 36:4 எரே 45:1
60யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.எரே 30:2 எரே 30:3 எரே 36:2-4 எரே 36:32-4 ஏசா 8:1-4 ஏசா 30:8 தானி 12:4 ஆபகூ 2:2 ஆபகூ 2:3 வெளிப் 1:11 வெளிப் 1:19
61எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:மத் 24:1 மாற் 13:1
62கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித் தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி,எரே 51:25 எரே 51:26 எரே 51:29 எரே 51:37 எரே 50:3 எரே 50:13 எரே 50:39 எரே 50:40 ஏசா 13:19-22 ஏசா 14:22 ஏசா 14:23 வெளிப் 18:20-23
63நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு,எரே 19:10 எரே 19:11 வெளிப் 18:21
64இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.எரே 51:42 எரே 25:27 நாகூ 1:8 நாகூ 1:9 வெளிப் 14:8 வெளிப் 18:2 வெளிப் 18:21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.