1 | திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம். | 1இரா 1:47 பிரச 7:1 லூக் 10:20 பிலிப் 4:3 எபிரெ 11:39 |
2 | ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். | நீதி 29:13 1சாமு 2:7 சங் 49:1 சங் 49:2 லூக் 16:19 லூக் 16:20 1கொரி 12:21 யாக் 2:2-5 |
3 | விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். | நீதி 14:16 நீதி 27:12 யாத் 9:20 யாத் 9:21 ஏசா 26:20 ஏசா 26:21 மத் 24:15-18 1தெச 5:2-6 எபிரெ 6:18 எபிரெ 11:7 |
4 | தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். | நீதி 3:16 நீதி 21:21 சங் 34:9 சங் 34:10 சங் 112:1-3 ஏசா 33:6 ஏசா 57:15 மத் 6:33 1தீமோ 4:8 யாக் 4:6 யாக் 4:10 |
5 | மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான். | நீதி 13:15 நீதி 15:19 யோசு 23:13 யோபு 18:8 சங் 11:6 சங் 18:26 சங் 18:27 |
6 | பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். | ஆதி 18:19 உபா 4:9 உபா 6:7 சங் 78:3-6 எபே 6:4 2தீமோ 3:15 |
7 | ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. | நீதி 22:16 நீதி 22:22 நீதி 14:31 நீதி 18:23 ஆமோ 2:6 ஆமோ 4:1 ஆமோ 5:11 ஆமோ 5:12 ஆமோ 8:4 ஆமோ 8:6 யாக் 2:6 யாக் 5:1 யாக் 5:4 |
8 | அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும். | யோபு 4:8 ஓசி 8:7 ஓசி 10:13 கலா 6:7 கலா 6:8 |
9 | கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். | நீதி 11:25 நீதி 19:17 நீதி 21:13 உபா 15:7-11 உபா 28:56 யோபு 31:16-20 சங் 41:1-3 சங் 112:9 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 32:8 ஏசா 58:7-12 மத் 20:15 மத் 25:34-40 மாற் 7:22 லூக் 6:35-38 அப் 20:35 2கொரி 8:1 2கொரி 8:2 2கொரி 9:6-11 1தீமோ 6:18 1தீமோ 6:19 எபிரெ 6:10 எபிரெ 13:16 1பேது 4:9 |
10 | பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். | நீதி 21:24 நீதி 26:20 நீதி 26:21 ஆதி 21:9 ஆதி 21:10 நெகே 4:1-3 நெகே 13:28 சங் 101:5 மத் 18:17 1கொரி 5:5 1கொரி 5:6 1கொரி 5:13 |
11 | சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான். | நீதி 16:13 சங் 101:6 மத் 5:8 |
12 | கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். | 2நாளா 16:9 ஏசா 59:19-21 மத் 16:16-18 அப் 5:39 அப் 12:23 அப் 12:24 வெளிப் 11:3-11 வெளிப் 12:14-17 |
13 | வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான். | நீதி 15:19 நீதி 26:13-16 எண் 13:32 எண் 13:33 |
14 | பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். | நீதி 2:16-19 நீதி 5:3-23 நீதி 6:24-29 நீதி 7:5-27 நீதி 23:27 நியா 16:20 நியா 16:21 நெகே 13:26 பிரச 7:26 |
15 | பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும். | யோபு 14:4 சங் 51:5 யோவா 3:6 எபே 2:3 |
16 | தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான். | நீதி 22:22 நீதி 22:23 நீதி 14:31 நீதி 28:3 யோபு 20:19-29 சங் 12:5 மீகா 2:2 மீகா 2:3 சகரி 7:9-14 யாக் 2:13 யாக் 5:1-5 |
17 | உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. | நீதி 2:2-5 நீதி 5:1 நீதி 5:2 |
18 | அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும். | நீதி 2:10 நீதி 3:17 நீதி 24:13 நீதி 24:14 சங் 19:10 சங் 119:103 சங் 119:111 சங் 119:162 எரே 15:16 |
19 | உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். | நீதி 3:5 சங் 62:8 ஏசா 12:2 ஏசா 26:4 எரே 17:7 1பேது 1:21 |
20 | சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், | நீதி 8:6 சங் 12:6 ஓசி 8:12 2தீமோ 3:15-17 2பேது 1:19-21 |
21 | ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? | லூக் 1:3 லூக் 1:4 யோவா 20:31 1யோவா 5:13 |
22 | ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. | நீதி 23:10 நீதி 23:11 எசே 22:29 |
23 | கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். | நீதி 23:11 1சாமு 24:12 1சாமு 24:15 1சாமு 25:39 சங் 12:5 சங் 35:1 சங் 35:10 சங் 43:1 சங் 68:5 சங் 140:12 எரே 50:34 எரே 51:36 மீகா 7:9 மல்கி 3:5 |
24 | கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. | நீதி 21:24 நீதி 29:22 2கொரி 6:14-17 |
25 | அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். | நீதி 13:20 சங் 106:35 1கொரி 15:33 |
26 | கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. | நீதி 6:1-5 நீதி 11:15 நீதி 17:18 நீதி 27:13 |
27 | செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. | நீதி 20:16 யாத் 22:26 யாத் 22:27 2இரா 4:1 |
28 | உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே. | நீதி 23:10 உபா 19:14 உபா 27:17 யோபு 24:2 |
29 | தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். | நீதி 10:4 நீதி 12:24 1இரா 11:28 பிரச 9:10 மத் 25:21 மத் 25:23 ரோம 12:11 2தீமோ 4:2 |