1 | திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. | நீதி 23:29-35 நீதி 31:4 ஆதி 9:21-23 ஆதி 19:31-36 1சாமு 25:36-38 2சாமு 11:13 2சாமு 13:28 1இரா 20:16-21 ஏசா 28:7 ஓசி 4:11 ஓசி 7:5 ஆபகூ 2:15 ஆபகூ 2:16 1கொரி 6:10 கலா 5:21 எபே 5:18 |
2 | ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான். | நீதி 16:14 நீதி 16:15 நீதி 19:12 பிரச 10:4 ஓசி 11:10 ஆமோ 3:8 |
3 | வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். | நீதி 14:29 நீதி 16:32 நீதி 17:14 நீதி 19:11 நீதி 25:8-10 எபே 1:6-8 எபே 4:32 எபே 5:1 |
4 | சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. | நீதி 10:4 நீதி 19:15 நீதி 19:24 நீதி 26:13-16 |
5 | மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். | நீதி 18:4 சங் 64:6 1கொரி 2:11 |
6 | மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்? | நீதி 25:14 நீதி 27:2 மத் 6:2 லூக் 18:8 லூக் 18:11 லூக் 18:28 லூக் 22:33 2கொரி 12:11 |
7 | நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். | நீதி 14:2 நீதி 19:1 சங் 15:2 சங் 26:1 சங் 26:11 ஏசா 33:15 லூக் 1:6 2கொரி 1:12 தீத் 2:11 தீத் 2:12 3யோவா 1:3 3யோவா 1:4 |
8 | நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான். | நீதி 20:26 நீதி 16:12 நீதி 29:14 1சாமு 23:3 1சாமு 23:4 2சாமு 23:4 சங் 72:4 சங் 92:9 சங் 99:4 சங் 101:6-8 ஏசா 32:1 |
9 | என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? | 1இரா 8:46 2நாளா 6:36 யோபு 14:4 யோபு 15:14 யோபு 25:4 சங் 51:5 பிரச 7:20 1கொரி 4:4 யாக் 3:2 1யோவா 1:8-10 |
10 | வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். | உபா 25:13 |
11 | பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும். | நீதி 21:8 நீதி 22:15 சங் 51:5 சங் 58:3 மத் 7:16 லூக் 1:15 லூக் 1:66 லூக் 2:46 லூக் 2:47 லூக் 6:43 லூக் 6:44 |
12 | கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். | யாத் 4:11 சங் 94:9 சங் 119:18 மத் 13:13-16 அப் 26:18 எபே 1:17 எபே 1:18 |
13 | தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். | நீதி 6:9-11 நீதி 10:4 நீதி 12:11 நீதி 13:4 நீதி 19:15 நீதி 24:30-34 ரோம 12:11 2தெச 3:10 |
14 | கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். | பிரச 1:10 ஓசி 12:7 ஓசி 12:8 1தெச 4:6 |
15 | பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். | நீதி 3:15 நீதி 8:11 நீதி 10:20 நீதி 10:21 நீதி 15:7 நீதி 15:23 நீதி 16:16 நீதி 16:21 நீதி 16:24 நீதி 25:12 யோபு 28:12-19 பிரச 12:9-11 ரோம 10:14 ரோம 10:15 எபே 4:29 |
16 | அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள். | நீதி 11:15 நீதி 22:26 நீதி 22:27 நீதி 27:13 யாத் 22:26 யாத் 22:27 |
17 | வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். | நீதி 4:17 |
18 | ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு. | நீதி 15:22 நீதி 24:6 |
19 | தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே. | நீதி 11:13 நீதி 18:8 நீதி 26:20-22 லேவி 19:16 |
20 | தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும். | நீதி 30:11 நீதி 30:17 யாத் 20:12 யாத் 21:17 லேவி 20:9 உபா 27:16 மத் 15:4 மாற் 7:10-13 |
21 | ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. | நீதி 23:4 நீதி 28:20 நீதி 28:22 1தீமோ 6:9 |
22 | தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். | நீதி 17:13 நீதி 24:29 உபா 32:35 ரோம 12:17-19 1தெச 5:15 1பேது 3:9 |
23 | வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல. | நீதி 20:10 எசே 45:10 |
24 | கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? | சங் 37:23 எரே 10:23 தானி 5:23 அப் 17:28 |
25 | பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். | நீதி 18:7 லேவி 5:15 லேவி 22:10-15 லேவி 27:30 மல்கி 3:8-10 |
26 | ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். | நீதி 20:8 2சாமு 4:9-12 சங் 101:5-8 |
27 | மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். | ஆதி 2:7 யோபு 32:8 ரோம 2:15 1கொரி 2:11 2கொரி 4:2-6 1யோவா 3:19-21 |
28 | தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான். | நீதி 16:6 சங் 61:7 சங் 101:1 |
29 | வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. | எரே 9:23 எரே 9:24 1யோவா 2:14 |
30 | காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும். | நீதி 19:25 நீதி 22:15 ஏசா 27:9 எபிரெ 12:10 |