| 1 | இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும். | சங் 45:1 சங் 60:1 சங் 69:1 |
| 2 | எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும். | எண் 2:18-24 எண் 10:22-24 |
| 3 | தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். | சங் 80:7 சங் 80:19 சங் 85:4 1இரா 18:37 எரே 31:18 எரே 31:19 புலம் 5:21 |
| 4 | சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். | சங் 85:5 ஏசா 58:2 ஏசா 58:3 ஏசா 58:6-9 புலம் 3:44 மத் 15:22-28 லூக் 18:1-8 |
| 5 | கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்குப் போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். | சங் 42:3 சங் 102:9 யோபு 6:7 ஏசா 30:20 எசே 4:16 எசே 4:17 |
| 6 | எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள். | எரே 15:10 |
| 7 | சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். | சங் 80:3 சங் 80:19 சங் 51:10 லூக் 1:16 |
| 8 | நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். | ஏசா 5:1-7 ஏசா 27:2 ஏசா 27:3 எரே 2:21 எசே 15:6 எசே 17:6 எசே 19:10 மத் 21:33-41 யோவா 15:1-8 |
| 9 | அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. | சங் 105:44 யாத் 23:28-30 யோசு 23:13-15 யோசு 24:12 நெகே 9:22-25 |
| 10 | அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. | சங் 104:16 |
| 11 | அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. | சங் 72:8 ஆதி 15:18 யாத் 23:31 1இரா 4:21 1இரா 4:24 1நாளா 18:3 |
| 12 | இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? | சங் 89:40 சங் 89:41 ஏசா 5:5 ஏசா 18:5 ஏசா 18:6 நாகூ 2:2 லூக் 20:16 |
| 13 | காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. | 2இரா 18:1-19 2இரா 24:1-25 2நாளா 32:1-33 2நாளா 36:1-23 எரே 4:7 எரே 39:1-3 எரே 51:34 எரே 52:7 எரே 52:12-14 |
| 14 | சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்; | சங் 7:7 சங் 90:13 ஏசா 63:15 ஏசா 63:17 யோவே 2:14 மல்கி 3:7 அப் 15:16 |
| 15 | உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும். | சங் 80:8 ஏசா 5:1 ஏசா 5:2 எரே 2:21 மாற் 12:1 யோவா 15:1 |
| 16 | அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். | சங் 79:5 ஏசா 27:11 எசே 20:47 எசே 20:48 யோவா 15:6 |
| 17 | உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக. | சங் 80:15 சங் 89:21 சங் 110:1 ஏசா 53:5 தானி 7:13 தானி 7:14 யோவா 5:21-29 |
| 18 | அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம். | சங் 79:13 யோவா 6:66-69 எபிரெ 10:38 எபிரெ 10:39 |
| 19 | சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். | சங் 80:3 சங் 80:7 எரே 3:22 எரே 3:23 |