| 1 | கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். | சங் 22:5 சங் 25:2 சங் 25:3 சங் 31:1-3 சங் 125:1 சங் 146:5 2இரா 18:5 1நாளா 5:20 ரோம 9:33 1பேது 2:6 |
| 2 | உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும். | சங் 17:2 சங் 31:1 சங் 34:15 சங் 43:1 சங் 143:1 சங் 143:11 தானி 9:16 |
| 3 | நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர். | சங் 31:2 சங் 31:3 சங் 91:1 சங் 91:2 நீதி 18:10 ஏசா 33:16 |
| 4 | என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். | சங் 17:8 சங் 17:9 சங் 17:13 சங் 59:1 சங் 59:2 சங் 140:1-4 2சாமு 16:21 2சாமு 16:22 2சாமு 17:1 2சாமு 17:2 2சாமு 17:12-14 2சாமு 17:21-14 |
| 5 | கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். | சங் 13:5 சங் 39:7 சங் 42:11 சங் 119:81 சங் 119:166 எரே 17:7 எரே 17:13 எரே 17:17 ரோம 15:13 |
| 6 | நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். | சங் 22:9 சங் 22:10 நீதி 8:17 ஏசா 46:3 ஏசா 46:4 எரே 3:4 |
| 7 | அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர். | ஏசா 8:18 சகரி 3:6 லூக் 2:34 அப் 4:13 1கொரி 4:9 2கொரி 4:8-12 2கொரி 6:8-10 |
| 8 | என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. | சங் 71:15 சங் 71:24 சங் 35:28 சங் 51:14 சங் 51:15 சங் 145:1 சங் 145:2 சங் 146:2 |
| 9 | முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். | சங் 71:18 சங் 92:13-15 ஏசா 46:4 2தீமோ 1:12 2தீமோ 4:18 |
| 10 | என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: | சங் 10:9 சங் 56:6 நீதி 1:11 |
| 11 | தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள். | சங் 3:2 சங் 37:25 சங் 37:28 சங் 41:7 சங் 41:8 சங் 42:10 மத் 27:42 மத் 27:43 மத் 27:46 மத் 27:49 |
| 12 | தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். | சங் 22:11 சங் 22:19 சங் 35:22 சங் 38:21 சங் 38:22 சங் 69:18 |
| 13 | என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள். | சங் 71:24 சங் 6:10 சங் 35:4 சங் 35:26 சங் 40:14 சங் 40:15 ஏசா 41:11 எரே 20:11 |
| 14 | நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். | சங் 43:5 யோபு 13:15 புலம் 3:21 புலம் 3:26 எபிரெ 10:35 1பேது 1:13 1யோவா 3:3 |
| 15 | என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன். | சங் 71:8 சங் 71:24 சங் 22:22-25 சங் 30:12 சங் 40:9 சங் 40:10 சங் 145:2 சங் 145:5-14 |
| 16 | கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். | சங் 29:11 உபா 33:25 ஏசா 40:31 ஏசா 45:24 ஏசா 45:25 சகரி 10:12 எபே 3:16 எபே 6:10 பிலிப் 4:13 2தீமோ 2:1 |
| 17 | தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். | சங் 71:5 சங் 119:9 சங் 119:102 |
| 18 | இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக. | சங் 71:9 ஆதி 27:1 1சாமு 4:15 1சாமு 4:18 ஏசா 46:4 |
| 19 | தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? | சங் 36:5 சங் 36:6 சங் 57:10 சங் 139:6 நீதி 15:24 நீதி 24:7 ஏசா 5:16 ஏசா 55:9 |
| 20 | அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். | சங் 40:1-3 சங் 60:3 சங் 66:10-12 சங் 88:6-18 சங் 138:7 2சாமு 12:11 மாற் 14:33 மாற் 14:34 மாற் 15:34 2கொரி 11:23-31 வெளிப் 7:14 |
| 21 | என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். | சங் 72:11 2சாமு 3:1 ஏசா 9:7 ஏசா 49:6 வெளிப் 11:15 |
| 22 | என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன். | சங் 92:1-3 சங் 150:3-5 ஆபகூ 3:18 ஆபகூ 3:19 |
| 23 | நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். | சங் 63:5 சங் 104:33 லூக் 1:46 லூக் 1:47 |
| 24 | எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும். | சங் 71:8 சங் 71:15 சங் 37:30 உபா 11:19 நீதி 10:20 நீதி 10:21 மத் 12:35 எபே 4:29 |