| 1 | தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். | சங் 27:7 சங் 55:1 சங் 55:2 சங் 130:1 சங் 130:2 சங் 141:1 சங் 143:1-3 புலம் 3:55 புலம் 3:56 |
| 2 | துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். | சங் 27:5 சங் 31:20 சங் 143:9 ஏசா 32:2 |
| 3 | அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, | சங் 57:4 நீதி 12:18 நீதி 30:14 ஏசா 54:17 எரே 9:3 யாக் 3:6-8 |
| 4 | மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். | சங் 10:8 சங் 10:9 நெகே 4:11 ஆபகூ 3:14 |
| 5 | அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். | யாத் 15:9 எண் 22:6 நீதி 1:11-14 ஏசா 41:6 வெளிப் 11:10 |
| 6 | அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. | சங் 35:11 1சாமு 22:9 1சாமு 24:9 1சாமு 25:10 தானி 6:4 தானி 6:5 மத் 26:59 யோவா 18:29 யோவா 18:30 யோவா 19:7 |
| 7 | ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். | சங் 7:12 சங் 7:13 சங் 18:14 உபா 32:23 உபா 32:42 யோபு 6:4 புலம் 3:12 புலம் 3:13 |
| 8 | அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். | சங் 59:12 சங் 140:9 யோபு 15:6 நீதி 12:13 நீதி 18:7 மத் 21:41 லூக் 19:22 |
| 9 | எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்து கொள்வார்கள். | சங் 40:3 சங் 53:5 சங் 119:20 எரே 50:28 எரே 51:10 வெளிப் 11:13 |
| 10 | நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். | சங் 32:11 சங் 33:1 சங் 40:3 சங் 58:10 சங் 68:2 சங் 68:3 பிலிப் 4:4 |