| 1 | தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். | சங் 62:2 சங் 62:5 சங் 62:6 |
| 2 | அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. | சங் 62:6 சங் 18:2 சங் 21:1 சங் 27:1 சங் 73:25 சங் 73:26 உபா 32:30 உபா 32:31 ஏசா 26:4 ஏசா 32:2 |
| 3 | நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். | சங் 4:2 சங் 82:2 யாத் 10:3 யாத் 16:28 நீதி 1:22 நீதி 6:9 எரே 4:14 மத் 17:17 |
| 4 | அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா) | சங் 2:1-3 மத் 2:3 மத் 2:4 மத் 2:16 மத் 22:15 மத் 22:23 மத் 22:34 மத் 22:35 மத் 26:3 மத் 26:4 மத் 27:1 யோவா 11:47-50 அப் 4:16 அப் 4:17 அப் 4:25-28 |
| 5 | என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். | சங் 42:5 சங் 42:11 சங் 43:5 சங் 103:1 சங் 103:2 சங் 104:1 சங் 104:35 சங் 146:1 |
| 6 | அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. | சங் 62:2 சங் 18:31 சங் 18:32 ஏசா 45:17 ஓசி 1:7 |
| 7 | என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. | ஏசா 45:25 எரே 3:23 எரே 9:23 எரே 9:24 1கொரி 1:30 1கொரி 1:31 கலா 6:14 |
| 8 | ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா) | சங் 22:4 சங் 22:5 சங் 34:1 சங் 34:2 சங் 47:1-3 யோபு 13:15 ஏசா 26:4 ஏசா 50:10 1யோவா 2:28 |
| 9 | கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். | சங் 39:5 சங் 39:11 1சாமு 18:5 1சாமு 18:7 1சாமு 23:12 1சாமு 23:19 1சாமு 23:20 2சாமு 15:6 மத் 21:9 யோவா 19:15 |
| 10 | கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். | யோபு 20:19 யோபு 20:29 ஏசா 28:15 ஏசா 30:12 ஏசா 47:10 ஏசா 59:4 எரே 13:25 எரே 17:11 |
| 11 | தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. | யோபு 33:14 யோபு 40:5 |
| 12 | கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். | சங் 86:15 சங் 103:8 சங் 103:17 யாத் 34:6 யாத் 34:7 தானி 9:9 தானி 9:18 மீகா 7:18 |