இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 62

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.சங் 62:2 சங் 62:5 சங் 62:6
2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.சங் 62:6 சங் 18:2 சங் 21:1 சங் 27:1 சங் 73:25 சங் 73:26 உபா 32:30 உபா 32:31 ஏசா 26:4 ஏசா 32:2
3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.சங் 4:2 சங் 82:2 யாத் 10:3 யாத் 16:28 நீதி 1:22 நீதி 6:9 எரே 4:14 மத் 17:17
4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா)சங் 2:1-3 மத் 2:3 மத் 2:4 மத் 2:16 மத் 22:15 மத் 22:23 மத் 22:34 மத் 22:35 மத் 26:3 மத் 26:4 மத் 27:1 யோவா 11:47-50 அப் 4:16 அப் 4:17 அப் 4:25-28
5என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.சங் 42:5 சங் 42:11 சங் 43:5 சங் 103:1 சங் 103:2 சங் 104:1 சங் 104:35 சங் 146:1
6அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.சங் 62:2 சங் 18:31 சங் 18:32 ஏசா 45:17 ஓசி 1:7
7என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.ஏசா 45:25 எரே 3:23 எரே 9:23 எரே 9:24 1கொரி 1:30 1கொரி 1:31 கலா 6:14
8ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா)சங் 22:4 சங் 22:5 சங் 34:1 சங் 34:2 சங் 47:1-3 யோபு 13:15 ஏசா 26:4 ஏசா 50:10 1யோவா 2:28
9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.சங் 39:5 சங் 39:11 1சாமு 18:5 1சாமு 18:7 1சாமு 23:12 1சாமு 23:19 1சாமு 23:20 2சாமு 15:6 மத் 21:9 யோவா 19:15
10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.யோபு 20:19 யோபு 20:29 ஏசா 28:15 ஏசா 30:12 ஏசா 47:10 ஏசா 59:4 எரே 13:25 எரே 17:11
11தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.யோபு 33:14 யோபு 40:5
12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.சங் 86:15 சங் 103:8 சங் 103:17 யாத் 34:6 யாத் 34:7 தானி 9:9 தானி 9:18 மீகா 7:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.