இணை வசன வேதாகமம்

சங்கீதம் 22

                   
புத்தகங்களைக் காட்டு
1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?சங் 22:16 சங் 42:1 சங் 42:2
2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவு பதிலில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.சங் 42:3 சங் 55:16 சங் 55:17 சங் 88:1 லூக் 18:7 1தெச 3:10 2தீமோ 1:3
3இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.சங் 145:17 ஏசா 6:3 வெளிப் 4:8
4எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.சங் 44:1-7 ஆதி 15:6 ஆதி 32:9-12 ஆதி 32:28-12 யாத் 14:13 யாத் 14:14 யாத் 14:31 1சாமு 7:9-12 ரோம 4:18-22 எபிரெ 11:8-32
5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.சங் 99:6 சங் 99:7 சங் 106:44 நியா 4:3 நியா 6:6 நியா 10:10-16
6நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.யோபு 25:6 ஏசா 41:14
7என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:சங் 35:15 சங் 35:16 மத் 9:24 மத் 27:29 மத் 27:39 மாற் 15:20 மாற் 15:29 லூக் 16:14 லூக் 23:11 லூக் 23:35-39
8கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.சங் 37:5 சங் 55:22 நீதி 16:3 மத் 27:42 மத் 27:43
9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.சங் 71:6 சங் 139:15 சங் 139:16 ஏசா 49:1 ஏசா 49:2
10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.ஏசா 46:3 ஏசா 46:4 ஏசா 49:1 லூக் 2:40 லூக் 2:52
11என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.சங் 10:1 சங் 13:1-3 சங் 35:22 சங் 38:21 சங் 69:1 சங் 69:2 சங் 69:18 சங் 71:12 யோவா 16:32 எபிரெ 5:7
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.சங் 68:30 எரே 50:11
13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.சங் 22:7 சங் 35:21 யோபு 16:10 புலம் 2:16 புலம் 3:46 மத் 26:3 மத் 26:4 மத் 26:59-65
14தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டன, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.யோசு 7:5 மத் 26:38 லூக் 22:44 யோவா 12:27
15என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.சங் 32:3 சங் 32:4 நீதி 17:22
16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கினறன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.சங் 22:1 சங் 22:20 சங் 59:6 சங் 59:14 மத் 7:6 பிலிப் 3:2 வெளிப் 22:15
17என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.சங் 102:3-5 யோபு 33:21 ஏசா 52:14
18என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.மத் 27:35 மாற் 15:24 லூக் 23:34 யோவா 19:23 யோவா 19:24
19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.சங் 22:11 சங் 10:1
20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்க்கும் தப்புவியும்.சங் 17:13 சகரி 13:7
21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் பதிலருளினீர்.லூக் 22:53 யோவா 14:30 2தீமோ 4:17 1பேது 5:8
22உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.சங் 40:9 சங் 71:18 சங் 71:19 யோவா 7:25 யோவா 7:26 எபிரெ 2:11 எபிரெ 2:12
23கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.சங் 115:11 சங் 115:13 சங் 135:19 சங் 135:20 சங் 145:19 1நாளா 16:8-13 லூக் 1:50
24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.சங் 22:6 சங் 35:10 சங் 69:29-34 ஏசா 50:6-9
25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.சங் 22:22 சங் 35:18 சங் 40:9 சங் 40:10 சங் 111:1
26சிறுமைபட்டவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.சங் 69:32 லேவி 7:11-17 ஏசா 25:6 ஏசா 65:13 யோவா 6:48-58
27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய வம்சங்களெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.சங் 2:8 சங் 72:8 சங் 72:11 சங் 86:9 சங் 98:3 ஏசா 45:22 ஏசா 46:8 ஏசா 46:9 ஏசா 49:6 ஏசா 49:12
28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.சங் 47:7 சங் 47:8 தானி 7:14 ஒபதி 1:21 சகரி 14:9 மத் 6:13 வெளிப் 11:15
29பூமியின் செல்வந்தர் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.சங் 73:7 சங் 78:31 ஏசா 10:16
30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.ஏசா 53:10 எபிரெ 2:13
31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.சங் 78:6 சங் 86:9 சங் 102:18 சங் 145:4-7 ஏசா 44:3-5 ஏசா 49:21-23 ஏசா 54:1 ஏசா 60:4 ஏசா 66:7-9

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.