1 | வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. | சங் 8:3 சங் 33:6 சங் 115:16 சங் 148:3 சங் 148:4 ஏசா 40:22-26 எரே 10:11 எரே 10:12 ரோம 1:19 ரோம 1:20 |
2 | பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. | சங் 24:7-10 சங் 78:3-6 சங் 134:1-3 சங் 148:12 யாத் 15:20 யாத் 15:21 ஏசா 38:19 |
3 | அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. | உபா 4:19 |
4 | ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூவுலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். | சங் 98:3 ஏசா 49:6 ரோம 10:18 2கொரி 10:13-16 |
5 | அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. | ஏசா 61:10 ஏசா 62:5 யோவா 3:29 |
6 | அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெம்மைக்கு மறைவானது ஒன்றுமில்லை. | சங் 139:9 யோபு 25:3 பிரச 1:5 கொலோ 1:23 |
7 | கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. | சங் 78:1-7 சங் 119:72 சங் 119:96-100 சங் 119:105-100 சங் 119:127-100 சங் 119:128-100 சங் 147:19 சங் 147:20 உபா 6:6-9 உபா 17:18-20 யோசு 1:8 யோபு 23:12 ரோம 3:2 ரோம 15:4 |
8 | கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது. | சங் 105:45 சங் 119:12 சங் 119:16 சங் 119:80 சங் 119:171 ஆதி 26:5 யாத் 18:16 உபா 4:5 உபா 4:6 எசே 36:27 |
9 | கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன. | சங் 34:11-14 சங் 36:1 சங் 115:13 ஆதி 22:12 ஆதி 42:18 1சாமு 12:24 1இரா 18:3 1இரா 18:4 1இரா 18:12 நெகே 5:15 நீதி 8:13 அப் 10:22 ரோம 3:10-18 |
10 | அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன. | சங் 119:72 சங் 119:127 யோபு 28:15-17 நீதி 3:13-15 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:19 நீதி 16:16 |
11 | அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. | சங் 119:11 2நாளா 19:10 நீதி 6:22 நீதி 6:23 எசே 3:17-21 எசே 33:3-9 மத் 3:7 அப் 20:31 1கொரி 4:14 1தெச 5:14 எபிரெ 11:7 |
12 | தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். | சங் 40:12 யோபு 6:24 ஏசா 64:6 1கொரி 4:4 எபிரெ 9:7 |
13 | துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். | ஆதி 20:6 1சாமு 25:32-34 1சாமு 25:39-34 |
14 | என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. | சங் 5:1 சங் 5:2 சங் 51:15 சங் 66:18-20 சங் 119:108 ஆதி 4:4 ஆதி 4:5 நீதி 15:8 ரோம 15:16 எபிரெ 11:4 எபிரெ 13:15 1பேது 2:5 |