1 | என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். | சங் 36:1 சங் 116:16 2சாமு 22:1-51 அப் 13:36 எபிரெ 3:5 |
2 | கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். | சங் 28:1 சங் 62:2 சங் 62:7 ஏசா 32:2 |
3 | துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். | சங் 5:2 சங் 5:3 சங் 28:1 சங் 28:2 சங் 55:16 சங் 62:8 2சாமு 22:4 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
4 | மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. | சங் 116:3 2சாமு 22:5 2சாமு 22:6 ஏசா 13:8 ஏசா 53:3 ஏசா 53:4 மத் 26:38 மத் 26:39 மாற் 14:33 மாற் 14:34 2கொரி 1:9 |
5 | பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. | சங் 86:13 சங் 88:3-8 சங் 88:15-17 அப் 2:24 |
6 | எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. | சங் 18:3 சங் 18:4 சங் 50:15 சங் 130:1 சங் 130:2 மாற் 14:36 அப் 12:5 |
7 | அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. | சங் 114:4-7 மத் 28:2 அப் 4:31 அப் 16:25 அப் 16:26 |
8 | அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. | சங் 11:6 சங் 21:9 சங் 74:1 சங் 104:32 சங் 144:5 சங் 144:6 ஆதி 19:28 லேவி 10:2 எண் 11:1 எண் 16:35 உபா 29:20 உபா 29:23 உபா 29:24 2தெச 1:8 |
9 | வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. | சங் 68:4 சங் 144:5-15 உபா 33:26 2சாமு 22:10 ஏசா 51:6 யோவே 3:16 மத் 24:29 எபிரெ 12:26 2பேது 3:10 வெளிப் 20:11 |
10 | கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். | சங் 99:1 2சாமு 22:11 2சாமு 22:12 எசே 1:5-14 எசே 10:20-22 |
11 | இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; நீர் கொண்டு கறுத்த கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார். | சங் 27:5 சங் 81:7 சங் 91:1 |
12 | அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. | சங் 97:3 சங் 97:4 ஆபகூ 3:4 ஆபகூ 3:5 மத் 17:2 மத் 17:5 |
13 | கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. | சங் 78:48 சங் 104:7 யாத் 20:18 1சாமு 7:10 யோபு 40:9 யோவா 12:29 வெளிப் 4:5 வெளிப் 8:5 வெளிப் 19:6 |
14 | தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். | சங் 21:12 சங் 77:17 எண் 24:8 உபா 32:23 உபா 32:42 யோசு 10:10 யோபு 6:4 ஏசா 30:30 ஆபகூ 3:11 |
15 | அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. | சங் 74:15 சங் 106:9 யாத் 15:8 யோசு 3:13-16 2சாமு 22:16 |
16 | உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். | சங் 57:3 சங் 144:7 |
17 | என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். | சங் 38:19 2சாமு 22:1 2சாமு 22:18 எபிரெ 2:14 எபிரெ 2:15 |
18 | என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். | உபா 32:35 2சாமு 22:19 எரே 18:17 ஒபதி 1:10-14 சகரி 1:15 |
19 | என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால்பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். | சங் 18:36 சங் 31:8 சங் 40:2 சங் 118:5 யோபு 36:16 |
20 | கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். | சங் 58:11 1சாமு 24:17 1சாமு 24:20 நீதி 11:18 ஏசா 49:4 ஏசா 62:11 மத் 6:4 1கொரி 3:8 |
21 | ஏனெனில் கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாய் விலகினதில்லை. | சங் 17:4 சங் 26:1 சங் 119:10 சங் 119:11 அப் 24:16 1தெச 2:10 |
22 | அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. | சங் 119:13 சங் 119:128 யோவா 5:14 |
23 | அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். | சங் 7:1-8 சங் 11:7 சங் 17:3 சங் 37:27 1சாமு 26:23 1நாளா 29:17 |
24 | ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். | ரூத் 2:12 மத் 10:41 மத் 10:42 2தெச 1:6 2தெச 1:7 எபிரெ 6:16 |
25 | தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; | சங் 41:1-4 சங் 112:4-6 நெகே 9:17 ஏசா 57:1 ஏசா 57:2 ஏசா 58:7 ஏசா 58:8 மத் 18:33-35 லூக் 6:35-38 |
26 | புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். | சங் 109:17-19 லேவி 26:23 லேவி 26:24 லேவி 26:27 லேவி 26:28 நீதி 3:34 ரோம 2:4-6 ரோம 2:9-6 யாக் 2:13 |
27 | தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். | சங் 9:18 சங் 34:6 சங் 34:19 சங் 40:17 2சாமு 22:28 ஏசா 57:15 ஏசா 66:2 லூக் 1:52 லூக் 1:53 2கொரி 8:9 யாக் 2:5 |
28 | தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். | சங் 112:4 யோபு 18:6 யோபு 29:3 |
29 | உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். | சங் 44:6 சங் 44:7 சங் 144:1 சங் 144:10 1சாமு 17:49 1சாமு 23:2 1சாமு 30:8 2சாமு 5:19 2சாமு 5:20 2சாமு 5:25 எபே 6:10-13 கொலோ 2:15 வெளிப் 3:21 |
30 | தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். | சங் 19:7 சங் 25:10 உபா 32:4 2சாமு 22:31 தானி 4:37 ரோம 12:2 வெளிப் 15:3 |
31 | கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? | சங் 86:8 உபா 32:31 உபா 32:39 1சாமு 2:2 2சாமு 22:32 ஏசா 45:5 ஏசா 45:21 ஏசா 45:22 |
32 | என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. | சங் 28:7 சங் 91:2 சங் 93:1 ஏசா 45:5 2கொரி 3:5 |
33 | அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். | 2சாமு 2:18 |
34 | வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். | சங் 144:1 2சாமு 22:36 ஏசா 28:6 ஏசா 45:1 |
35 | உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். | சங் 5:12 சங் 28:7 உபா 33:29 2சாமு 22:36 |
36 | என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். | சங் 4:1 யோபு 18:7 யோபு 36:16 லூக் 12:50 லூக் 24:46-48 |
37 | என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. | சங் 3:7 சங் 9:3 சங் 35:2 சங் 35:5 சங் 118:11 சங் 118:12 எண் 24:17-19 ஏசா 53:10-12 ஏசா 63:1-6 வெளிப் 6:2 வெளிப் 19:19 வெளிப் 19:20 |
38 | அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். | 1சாமு 17:49-51 1சாமு 23:5 1சாமு 30:17 2சாமு 5:1-25 2சாமு 8:1-18 2சாமு 10:1-19 2சாமு 18:7 2சாமு 18:8 2சாமு 21:15-22 2சாமு 22:39 |
39 | யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். | சங் 18:32 எசே 30:24 எசே 30:25 |
40 | நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். |
41 | அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. | 2சாமு 22:42 2சாமு 22:43 யோபு 35:12 யோபு 35:13 நீதி 1:28 ஏசா 1:15 ஏசா 59:1 ஏசா 59:2 எரே 11:11 எரே 14:12 எசே 8:18 ஓசி 7:14 மீகா 3:4 சகரி 7:13 லூக் 13:25 |
42 | நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். | சங் 50:22 2இரா 13:7 ஏசா 41:2 ஏசா 41:15 ஏசா 41:16 |
43 | ஜனங்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். | 2சாமு 2:9 2சாமு 2:10 2சாமு 3:1 2சாமு 5:1-7 அப் 5:31 |
44 | அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக் குறுகுகிறார்கள். | ரோம 10:16 ரோம 10:17 |
45 | அந்நியர் மனமடிந்து, தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். | ஏசா 24:4 மீகா 7:17 யாக் 1:11 |
46 | கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. | 2சாமு 22:47 எரே 10:10 யோவா 14:19 வெளிப் 1:18 |
47 | அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். | உபா 32:35 2சாமு 22:48 நாகூ 1:2 ரோம 12:19 |
48 | அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். | சங் 22:27-30 சங் 59:1 சங் 59:2 சங் 89:13 பிலிப் 2:9 |
49 | இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். | சங் 14:7 சங் 30:12 சங் 72:18 சங் 72:19 சங் 138:4 2சாமு 22:50 2சாமு 22:51 ரோம 15:9 1தீமோ 6:13 |
50 | தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார். | சங் 2:6 சங் 78:71 சங் 78:72 சங் 89:3 சங் 89:4 சங் 144:10 1சாமு 2:10 1சாமு 16:1 அப் 2:34-36 பிலிப் 2:9-11 |