| 1 | கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும். | சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1 சங் 130:1 சங் 131:1 |
| 2 | அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், | சங் 56:12 சங் 65:1 சங் 66:13 சங் 66:14 சங் 116:14-18 சங் 119:106 2சாமு 7:1 |
| 3 | என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, | பிரச 9:10 ஆகா 1:4 மத் 6:33 |
| 4 | என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, | ஆதி 24:33 ரூத் 3:18 நீதி 6:4 |
| 5 | கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான். | 2சாமு 6:17 1நாளா 15:3 1நாளா 15:12 அப் 7:46 |
| 6 | இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம். | ரூத் 1:2 1சாமு 17:12 மீகா 5:2 |
| 7 | அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம். | சங் 5:7 சங் 66:13 சங் 66:14 சங் 118:19 சங் 122:1 ஏசா 2:3 |
| 8 | கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும். | சங் 68:1 எண் 10:35 எண் 10:36 2நாளா 6:41 2நாளா 6:42 |
| 9 | உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக. | சங் 132:16 சங் 93:1 சங் 104:1 யோபு 29:14 ஏசா 61:10 ரோம 13:14 1பேது 5:5 வெளிப் 19:8 |
| 10 | நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும். | 1இரா 11:12 1இரா 11:13 1இரா 11:34 1இரா 15:4 1இரா 15:5 2இரா 19:34 ஓசி 3:5 |
| 11 | உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், | சங் 89:3 சங் 89:4 சங் 89:33 சங் 89:37 சங் 110:4 1சாமு 15:29 எரே 33:20-26 எபிரெ 6:18 |
| 12 | உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். | சங் 89:30-35 |
| 13 | கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். | சங் 76:1 சங் 76:2 சங் 78:68 சங் 78:69 ஏசா 14:32 எபிரெ 12:22 |
| 14 | இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன். | சங் 132:8 ஏசா 11:10 ஏசா 66:1 செப் 3:17 |
| 15 | அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். | சங் 147:14 யாத் 23:25 லேவி 26:4 லேவி 26:5 உபா 28:2-5 நீதி 3:9 நீதி 3:10 ஆகா 1:6 ஆகா 1:9 ஆகா 2:16-19 மல்கி 2:2 மத் 14:19-21 லூக் 1:53 2கொரி 9:10 2கொரி 9:11 |
| 16 | அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். | சங் 132:9 சங் 140:4 2நாளா 6:41 ஏசா 61:10 கலா 3:27 |
| 17 | அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன். | சங் 92:10 சங் 148:14 எசே 29:21 லூக் 1:69 |
| 18 | அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன் மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார். | சங் 21:8 சங் 21:9 சங் 35:26 சங் 109:29 யோபு 8:22 தானி 12:2 |