இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 102

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.சங் 12:5 சங் 61:2 சங் 69:1 சங் 69:2 சங் 142:2 சங் 142:3 சங் 143:4 புலம் 3:18-20 மாற் 14:33 மாற் 14:34 லூக் 22:44 எபிரெ 5:7
2என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.சங் 13:1 சங் 27:9 சங் 69:17 சங் 88:14 சங் 104:29 சங் 143:7 யோபு 34:29 ஏசா 8:17 ஏசா 43:2 1கொரி 10:13
3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.சங் 37:20 சங் 119:83 யாக் 4:14
4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.சங் 6:2 சங் 6:3 சங் 42:6 சங் 55:4 சங் 55:5 சங் 69:20 சங் 77:3 சங் 143:3 சங் 143:4 யோபு 6:4 யோபு 10:1 புலம் 3:13 புலம் 3:20 மத் 26:37 மத் 26:38
5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.சங் 6:6 சங் 6:8 சங் 32:3 சங் 32:4 சங் 38:8-10 யோபு 19:20 நீதி 17:22 புலம் 4:8
6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.யோபு 30:29 யோபு 30:30 ஏசா 38:14 மீகா 1:8
7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.சங் 22:2 சங் 77:4 சங் 130:6 உபா 28:66 உபா 28:67 யோபு 7:13-16 மாற் 14:33-37
8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.சங் 31:11-13 சங் 55:3 சங் 69:9 சங் 69:10 சங் 69:20 சங் 89:51 ரோம 15:3
9நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.சங் 69:21 ஏசா 44:20 புலம் 3:15 புலம் 3:16 மீகா 1:10 மீகா 7:17
10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.சங் 38:3 சங் 38:18 சங் 39:11 சங் 90:7-9 புலம் 1:18 புலம் 3:39-42 புலம் 5:16 தானி 9:8-14 ரோம 3:19
11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.சங் 102:3 சங் 39:5 சங் 39:6 சங் 109:23 சங் 144:4 யோபு 14:2 பிரச 6:12 யாக் 4:14
12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.சங் 102:24-27 சங் 9:7 சங் 90:1 சங் 90:2 உபா 33:27 ஏசா 44:6 ஏசா 60:15 புலம் 5:19 எபிரெ 13:8 வெளிப் 1:17 வெளிப் 1:18
13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.சங் 7:6 சங் 44:26 சங் 51:18 சங் 69:35 சங் 69:36 ஏசா 14:32 ஏசா 60:1 ஏசா 60:10-14 எரே 31:10-12 எரே 31:23-12 சகரி 1:12 சகரி 1:13 சகரி 2:10-12
14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.சங் 79:1 சங் 79:7-10 சங் 137:5 சங் 137:6 எஸ்றா 1:5 எஸ்றா 3:1-3 எஸ்றா 7:27 நெகே 1:3 நெகே 2:3 நெகே 2:17 நெகே 4:2 நெகே 4:6 நெகே 4:10 தானி 9:16
15கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.சங் 67:2-4 சங் 68:31 சங் 68:32 சங் 72:11 சங் 86:9 சங் 138:4 1இரா 8:43 ஏசா 55:5 ஏசா 60:3-22 சகரி 8:20-23 வெளிப் 11:15 வெளிப் 21:24
16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.சங் 51:18 சங் 69:35 சங் 147:2 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 14:26 ஏசா 66:18 எரே 31:4 எரே 33:7
17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.சங் 9:18 சங் 72:12 உபா 4:29 உபா 32:36 நெகே 1:6 நெகே 1:11 நெகே 2:1-8 எரே 29:11-14 தானி 9:3-21
18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.சங் 71:18 சங் 78:4-6 யாத் 17:14 உபா 31:19-32 யோபு 19:23 யோபு 19:24 தானி 9:2 யோவா 20:31 ரோம 15:4 1கொரி 10:11 2தீமோ 3:16 2தீமோ 3:17 2பேது 1:15
19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,சங் 14:2 சங் 33:13 சங் 33:14 உபா 26:15 1இரா 8:39 1இரா 8:43 2நாளா 16:9
20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.சங் 79:11 சங் 146:7 யாத் 2:23-25 யாத் 3:7 2இரா 13:4 2இரா 13:22 2இரா 13:23 யோபு 24:12 ஏசா 14:17 ஏசா 61:1-3 எரே 51:34 எரே 51:35 சகரி 9:9-12
21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,சங் 9:13 சங் 9:14 சங் 22:22 சங் 51:14 சங் 51:15 சங் 79:13 ஏசா 51:11 எபே 2:4-7 எபே 3:21 1பேது 2:9
22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.சங் 72:8-11 ஆதி 49:10 ஏசா 49:22 ஏசா 49:23 ஏசா 60:3-22 ஓசி 1:9-11 சகரி 8:20-23 மத் 24:14 ரோம 15:19
23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.சங் 89:38-47 2தெச 2:3-12 1தீமோ 4:1-3 2தீமோ 3:1-17 வெளிப் 11:2-19 வெளிப் 12:13-17
24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.சங் 39:13 ஏசா 38:10-22
25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.ஆதி 1:1 ஆதி 2:1 யாத் 20:11 யோபு 38:4-7 நீதி 8:23-36 எரே 32:17 எபிரெ 1:10-12 எபிரெ 3:3 எபிரெ 3:4
26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.ஏசா 34:4 ஏசா 51:6 ஏசா 65:17 ஏசா 66:22 லூக் 21:33 ரோம 8:20 2பேது 3:7-12 வெளிப் 20:11 வெளிப் 21:1
27நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.மல்கி 3:6 யோவா 8:58 எபிரெ 13:8 யாக் 1:17 வெளிப் 1:8 வெளிப் 1:17 வெளிப் 1:18
28உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.சங் 22:30 சங் 22:31 சங் 45:16 சங் 45:17 சங் 69:35 சங் 69:36 ஏசா 53:10 ஏசா 59:20 ஏசா 59:21 ஏசா 65:22 ஏசா 66:22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.