| 1 | ஆதாம், சேத், ஏனோஸ் |
| 2 | கேனான், மகலாலெயேல், யாரேத் |
| 3 | ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு |
| 4 | நோவா, சேம், காம், யாப்பேத் |
| 5 | யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். |
| 6 | கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். |
| 7 | யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். |
| 8 | காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். |
| 9 | கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். |
| 10 | கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். |
| 11 | மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபியர்களையும், நப்தூகியர்களையும் |
| 12 | பத்ரூசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தோரியர்களையும் பெற்றான். |
| 13 | கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும் |
| 14 | எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும் |
| 15 | ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும் |
| 16 | அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றான். |
| 17 | சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள். |
| 18 | அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். |
| 19 | ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். |
| 20 | யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும் |
| 21 | அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும் |
| 22 | ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும் |
| 23 | ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள். |
| 24 | சேம், அர்பக்சாத், சாலா |
| 25 | ஏபேர், பேலேகு, ரெகூ |
| 26 | செரூகு, நாகோர், தேராகு |
| 27 | ஆபிராமாகிய ஆபிரகாம். |
| 28 | ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். |
| 29 | இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம் |
| 30 | மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா |
| 31 | யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள். |
| 32 | ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். |
| 33 | மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள். |
| 34 | ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். |
| 35 | ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். |
| 36 | எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். |
| 37 | ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள். |
| 38 | சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், தீசான் என்பவர்கள். |
| 39 | லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். |
| 40 | சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். |
| 41 | ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். |
| 42 | திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். |
| 43 | இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. |
| 44 | பேலா இறந்தபின்பு போஸ்ரா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். |
| 45 | யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். |
| 46 | ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். |
| 47 | ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். |
| 48 | சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். |
| 49 | சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். |
| 50 | பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மாத்திரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். |
| 51 | ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு |
| 52 | அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு |
| 53 | கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு |
| 54 | மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள். |