1 | அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது; பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான். ஏரோது கலிலேயாவை ஆண்டான். ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான். |
2 | அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் மகனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். |
3 | யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். |
4 | இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது: ԇவனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்: ԅகர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள். அவருக்குப் பாதையை நேராக்குங்கள். |
5 | பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும். திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும். கரடுமுரடான பாதைகள் மென்மையாகும். |
6 | ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.ԆԈ ஏசாயா 40:3-5 |
7 | யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும் பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, ԇநீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? |
8 | உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ԅஆபிரகாம் எங்கள் தந்தைԆ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக் கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். |
9 | மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்Ԉ என்றான். |
10 | மக்கள் யோவானை நோக்கி, ԇநாங்கள் செய்ய வேண்டியது என்ன?Ԉ என்று கேட்டனர். |
11 | அவர்களுக்கு யோவான், ԇஉங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடை கூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்Ԉ என்று பதிலுரைத்தான். |
12 | வரி வசூலிப்போரும் கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், ԇபோதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?Ԉ என்று கேட்டார்கள். |
13 | அவர்களிடம் யோவான், ԇஎந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்Ԉ என்று கூறினான். |
14 | வீரர்கள் யோவானை நோக்கி, ԇஎங்களைப் பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?Ԉ என்று கேட்டனர். அவர்களுக்கு யோவான், ԇஉங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்Ԉ என்று கூறினான். |
15 | எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், ԇஇவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்Ԉ என்று எண்ணினர். |
16 | அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், ԇநான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். |
17 | ԇதானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,Ԉ என்று பதில் கூறினான். |
18 | யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான். |
19 | ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக் கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். |
20 | எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது. |
21 | யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. |
22 | பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது ԇநீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்Ԉ என்று உரைத்தது. |
23 | இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் மகன் என்றே எண்ணினர். யோசேப்பு ஏலியின் மகன். |
24 | ஏலி மாத்தாத்தின் மகன். மாத்தாத் லேவியின் மகன். லேவி மெல்கியின் மகன். மெல்கி யன்னாவின் மகன். யன்னா யோசேப்பின் மகன். |
25 | யோசேப்பு மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா ஆமோஸின் மகன். ஆமோஸ் நாகூமின் மகன். நாகூம் எஸ்லியின் மகன். எஸ்லி நங்காயின் மகன் |
26 | நங்காய் மாகாத்தின் மகன். மாகாத் மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா சேமேயின் மகன். சேமேய் யோசேப்பின் மகன். யோசேப்பு யூதாவின் மகன். |
27 | யூதா யோவன்னாவின் மகன். யோவன்னா ரேசாவின் மகன். ரேசா செரூபாபேலின் மகன். செரூபாபேல் சலாத்தியேலின் மகன். சலாத்தியேல் நேரியின் மகன். |
28 | நேரி மெல்கியின் மகன். மெல்கி அத்தியின் மகன். அத்தி கோசாமின் மகன். கோசாம் எல்மோதாமின் மகன். எல்மோதாம் ஏரின் மகன். |
29 | ஏர் யோசேயின் மகன். யோசே எலியேசரின் மகன். எலியேசர் யோரீமின் மகன். யோரீம் மாத்தாத்தின் மகன். மாத்தாத் லேவியின் மகன். |
30 | லேவி சிமியோனின் மகன். சிமியோன் யூதாவின் மகன். யூதா யோசேப்பின் மகன். யோசேப்பு யோனானின் மகன். யோனான் எலியாக்கீமின் மகன். |
31 | எலியாக்கீம் மெலெயாவின் மகன். மெலெயா மயினானின் மகன். மயினான் மத்தாத்தாவின் மகன். மத்தாத்தா நாத்தானின் மகன். நாத்தான் தாவீதின் மகன். |
32 | தாவீது ஈசாயின் மகன். ஈசாய் ஓபேதின் மகன். ஓபேத் போவாசின் மகன். போவாஸ் சல்மோனின் மகன். சல்மோன் நகசோனின் மகன். |
33 | நகசோன் அம்மினதாபின் மகன். அம்மினதாப் ஆராமின் மகன். ஆராம் எஸ்ரோமின் மகன். எஸ்ரோம் பாரேசின் மகன். பாரேஸ் யூதாவின் மகன். |
34 | யூதா யாக்கோபின் மகன். யாக்கோபு ஈசாக்கின் மகன். ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தேராவின் மகன். தேரா நாகோரின் மகன். |
35 | நாகோர் சேரூக்கின் மகன். சேரூக் ரெகூவின் மகன். ரெகூ பேலேக்கின் மகன். பேலேக் ஏபேரின் மகன். ஏபேர் சாலாவின் மகன். |
36 | சாலா காயினானின் மகன். காயினான் அர்பக்சாத்தின் மகன். அர்பக்சாத் சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா லாமேக்கின் மகன். |
37 | லாமேக் மெத்தூசலாவின் மகன். மெத்தூசலா ஏனோக்கின் மகன். ஏனோக் யாரேதின் மகன். யாரேத் மகலாலெயேலின் மகன். மகலாலெயேல் கேனானின் மகன். கேனான் ஏனோஸின் மகன். |
38 | ஏனோஸ் சேத்தின் மகன். சேத் ஆதாமின் மகன். ஆதாம் தேவனின் மகன். |