வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 138

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாக வும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட் டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும் போது பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6தேவன் மிக முக்கியமானவர். ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர் கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களி டமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். கர்த்தாவே, உமது உண்மை அன்பு என் றென்றும் தொடரும். கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடா தேயும்!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.