ஆசிரியர் பூன்-சிங் போ 1954-ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். இரட்சிப்பறியாத பின்னணியில் பிறந்த இவர், இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது தேவகிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டார். தமது படிப்பை முடித்த பின்பு, ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் (Reformed Baptist) சபையை நிறுவினார். தமது விசுவாசத்தினிமித்தம் 1987 முதல் 1988 வரை சுமார் 325 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். டமான்சாரா சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் திருச்சபையில் (DRBC) தலைமைப் போதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். திருமணமான இவருக்கு நான்கு குமாரர்களும் பேரக்குழந்தைகளும் உள்ளனர். லிவர்பூல் (Liverpool) பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பொறியியல் (Electronics Engineering) துறையில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமயவியல் குறித்த பட்டப்படிப்பையும், நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.