இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் ஆர்தர் வால்கிங்டன் பிங்க் (Arthur Walkington Pink) அவர்களின் பத்திரிகை ஊழியம் ஆற்றிய முக்கியப் பங்கு மிகக் குறைந்த அளவே அறியப்பட்டது. 1921-ஆம் ஆண்டில் அவர் ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில், முழுக்க முழுக்க அவராலேயே எழுதப்பட்ட ஒரு மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கி, முப்பது ஆண்டுகள் அதனை நடத்தினார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய ஒட்டுமொத்த வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதில்லை. இது ஆர்தர் பிங்க் அவர்களைச் சோர்வுறச் செய்யவே இல்லை. பரவலாகக் காணப்பட்ட ஆவிக்குரிய பெலவீனங்களைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்ததால், தமது பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்த உலகமெங்கிலும் இருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு ஊழியம் செய்யும்படித் தன்னையே எந்தத் தயக்கமுமின்றி அர்ப்பணித்தார். கிறிஸ்தவர்களிடையே சிறந்த அறிவையும், பரிசுத்த வாழ்க்கையையும், ஜெபத்தையும், தேவபக்தியையும் ஏற்படுத்தும் விதத்தில் வேத விளக்கம் அளிக்க வேண்டுமென்பதே அவருடைய குறிக்கோளாக இருந்தது.
1952-இல் அவருடைய மரணத்திற்குப் பிறகு, அவர் உண்மையுடன் காத்துக்கொண்ட சத்தியத்தை அறிய வேண்டுமென்ற ஆர்வம் தட்டியெழுப்பப்பட்ட போது, அவருடைய படைப்புகள் பரவலாக மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்து, பெரிதும் மதிக்கப்பட்டன. அவருடைய பத்திரிகையில் வெளிவந்த பல வேத விளக்கங்கள் சமீபத்தில் உலகம் முழுவதும் மறுபடியும் அச்சிடப்பட்டுள்ளன.
அவருடைய படைப்புகள் வேத விளக்கப் போதனையில் ஓர் எழுப்புதல் தீப்பொறியாக இருந்து, அவருடைய வாசகர்களைப் பரிசுத்த ஜீவியத்திற்கு நேராய் வழிநடத்தின. இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் முதலாவதாக அவருடைய ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற மாதப் பத்திரிகையிலேயே பிரசுரமானவை. இது ஆர்தர் பிங்க் அவர்கள் எழுதிய 'Profiting from the Word' என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமாகும்.
இந்தப் புத்தகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சு வடிவிலான புத்தகம் எங்களிடம் உள்ளது. இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள "8072805394" தொடர்புக் கொண்டு நீங்கள் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.