இணை வசன வேதாகமம்

1கொரிந்தியர் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது:ரோம 1:1 கலா 2:7 கலா 2:8
2இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,அப் 18:1 அப் 18:8-11 2கொரி 1:1 கலா 1:2 1தெச 1:1 2தெச 1:1 1தீமோ 3:15
3நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.ரோம 1:7 2கொரி 1:2 எபே 1:2 1பேது 1:2
4கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.ரோம 1:8 ரோம 6:17 அப் 11:23 அப் 21:20
5ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.1கொரி 4:7-10 ரோம 11:12 2கொரி 9:11 எபே 2:7 எபே 3:8
6மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.1கொரி 2:1 1கொரி 2:2 அப் 18:5 அப் 20:21 அப் 20:24 அப் 22:18 அப் 23:11 அப் 28:23 1தீமோ 2:6 2தீமோ 1:8 1யோவா 5:11-13 வெளிப் 1:2 வெளிப் 1:9 வெளிப் 6:9 வெளிப் 12:11 வெளிப் 12:17 வெளிப் 19:10
7ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.2கொரி 12:13
8நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.சங் 37:17 சங் 37:28 ரோம 14:4 ரோம 16:25 2கொரி 1:21 1தெச 3:13 1தெச 5:24 2தெச 3:3 1பேது 5:10
9கடவுள் நம்பிக்கைக்குரியவர்: தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.1கொரி 10:13 எண் 23:19 உபா 7:9 உபா 32:4 சங் 89:33-35 சங் 100:5 ஏசா 11:5 ஏசா 25:1 ஏசா 49:7 புலம் 3:22 புலம் 3:23 மத் 24:35 1தெச 5:23 1தெச 5:24 2தெச 3:3 தீத் 1:2 எபிரெ 2:17 எபிரெ 6:18 எபிரெ 10:23 எபிரெ 11:11 வெளிப் 19:11
10சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.1கொரி 4:16 ரோம 12:1 2கொரி 5:20 2கொரி 6:1 2கொரி 10:1 கலா 4:12 எபே 4:1 பிலேமோ 1:9 பிலேமோ 1:10 1பேது 2:11
11என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.1கொரி 11:18 ஆதி 27:42 ஆதி 37:2 1சாமு 25:14-17
12நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றோ “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ “நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ, “நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் “ என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.1கொரி 7:29 1கொரி 15:50 2கொரி 9:6 கலா 3:17
13கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?2கொரி 11:4 கலா 1:7 எபே 4:5
14கிறிஸ்பு, காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.1கொரி 1:4 1கொரி 14:18 2கொரி 2:14 எபே 5:20 கொலோ 3:15 கொலோ 3:17 1தெச 5:18 1தீமோ 1:12 பிலேமோ 1:4
15ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.யோவா 3:28 யோவா 3:29 யோவா 7:18 2கொரி 11:2
16ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.1கொரி 16:15 1கொரி 16:17 அப் 16:15 அப் 16:33
17திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.யோவா 4:2 அப் 10:48 அப் 26:17 அப் 26:18
18சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.1கொரி 1:23 1கொரி 1:24 1கொரி 2:2 கலா 6:12-14
19ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன் “ என்று மறைநூலில் எழுதியுள்ளது.1கொரி 3:19 யோபு 5:12 யோபு 5:13 ஏசா 19:3 ஏசா 19:11 ஏசா 29:14 எரே 8:9
20இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?ஏசா 33:18 ஏசா 53:1
21கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.1கொரி 1:24 தானி 2:20 ரோம 11:33 எபே 3:10
22யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.மத் 12:38 மத் 12:39 மத் 16:1-4 மாற் 8:11 லூக் 11:16 லூக் 11:20 யோவா 2:18 யோவா 4:28
23ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.1கொரி 1:18 1கொரி 2:2 லூக் 24:46 லூக் 24:47 அப் 7:32-35 அப் 10:39-43 2கொரி 4:5 கலா 3:1 கலா 6:14 எபே 3:8
24ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.1கொரி 1:2 1கொரி 1:9 லூக் 7:35 ரோம 8:28-30 ரோம 9:24
25ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.1கொரி 1:18 1கொரி 1:27-29 யாத் 13:17 யாத் 14:2-4 யோசு 6:2-5 நியா 7:2-8 நியா 15:15 நியா 15:16 1சாமு 17:40-51 1இரா 20:14-22 சகரி 4:6 சகரி 4:7 சகரி 12:7 சகரி 12:8 ரோம 11:33-36
26எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?1கொரி 1:20 1கொரி 2:3-6 1கொரி 2:13-6 1கொரி 3:18-20 செப் 3:12 மத் 11:25 மத் 11:26 லூக் 10:21 யோவா 7:47-49 யாக் 3:13-17
27ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.சங் 8:2 ஏசா 26:5 ஏசா 26:6 ஏசா 29:14 ஏசா 29:19 செப் 3:12 மத் 4:18-22 மத் 9:9 மத் 11:25 மத் 21:16 லூக் 19:39 லூக் 19:40 லூக் 21:15 அப் 4:11-21 அப் 6:9 அப் 6:10 அப் 7:35 அப் 7:54 அப் 17:18 அப் 24:24 அப் 24:25 2கொரி 4:7 2கொரி 10:4 2கொரி 10:5 2கொரி 10:10
28உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.ரோம 4:17 2கொரி 12:11
29எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.1கொரி 1:31 1கொரி 4:7 1கொரி 5:6 சங் 49:6 ஏசா 10:15 எரே 9:23 ரோம 3:19 ரோம 3:27 ரோம 4:2 ரோம 15:17 எபே 2:9
30அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.1கொரி 12:18 1கொரி 12:27 ஏசா 45:17 யோவா 15:1-6 யோவா 17:21-23 ரோம 8:1 ரோம 12:5 ரோம 16:7 ரோம 16:11 2கொரி 5:17 2கொரி 12:2 எபே 1:3 எபே 1:4 எபே 1:10 எபே 2:10
31எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். “1நாளா 16:10 1நாளா 16:35 சங் 105:3 ஏசா 41:16 ஏசா 45:25 எரே 4:2 எரே 9:23 எரே 9:24 2கொரி 10:17 கலா 6:13 கலா 6:14 பிலிப் 3:3

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.