இணை வசன வேதாகமம்

1கொரிந்தியர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.அப் 18:1-4
2நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.1கொரி 1:22-25 யோவா 17:3 கலா 3:1 கலா 6:14 பிலிப் 3:8-10
3நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன்.1கொரி 4:10-13 அப் 17:1 அப் 17:6-12 அப் 20:18 அப் 20:19 2கொரி 4:1 2கொரி 4:7-12 2கொரி 4:16-12 2கொரி 6:4 2கொரி 7:5 2கொரி 10:1 2கொரி 10:10 2கொரி 11:29 2கொரி 11:30 2கொரி 12:5-10 2கொரி 13:4 கலா 4:13 கலா 4:14
4நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.அப் 20:27
5உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே.1கொரி 1:17 1கொரி 3:6 அப் 16:14 2கொரி 4:7 2கொரி 6:7
6எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல: உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்.1கொரி 14:20 யோபு 1:1 சங் 37:37 மத் 5:48 மத் 19:21 2கொரி 13:11 எபே 4:11-13 பிலிப் 3:12-15 கொலோ 4:12 எபிரெ 5:14 யாக் 3:2 1பேது 5:10
7வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.சங் 78:2 ஏசா 48:6 ஏசா 48:7 மத் 11:25 மத் 13:35 ரோம 16:25 ரோம 16:26 எபே 1:4 எபே 3:4-9 கொலோ 1:26 கொலோ 1:27 2தீமோ 1:9 1பேது 1:11 வெளிப் 13:8
8இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.1கொரி 2:6 1கொரி 1:26-28 மத் 11:25 யோவா 7:48
9ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை: செவிக்கு எட்டவில்லை: மனித உள்ளமும் அதை அறியவில்லை. “ஏசா 64:4 யோவா 3:16 1பேது 1:12
10இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்: கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.1கொரி 14:30 ஆமோ 3:7 மத் 11:25-27 மத் 13:11 மத் 16:17 லூக் 2:26 லூக் 10:21 எபே 3:3 எபே 3:5 1பேது 1:12 வெளிப் 1:1
11மனிதரின் உள்ளத்திலிருப்பதை அவருள்ளிருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறியமுடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்திலிருப்பதை அவர் தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.நீதி 14:10 நீதி 20:5 நீதி 20:27 எரே 17:9
12ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்ளுகிறோம்.1கொரி 2:6 ரோம 8:1 ரோம 8:5 ரோம 8:6 2கொரி 4:4 எபே 2:2 யாக் 4:5 1யோவா 4:4 1யோவா 4:5 1யோவா 5:19 வெளிப் 12:9
13ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை: மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.1கொரி 2:4 1கொரி 1:17 2பேது 1:16
14மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும்.1கொரி 15:44 1கொரி 15:46 யாக் 3:15 யூதா 1:19
15ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.1கொரி 3:1 1கொரி 14:37 கலா 6:1 கொலோ 1:9
16“ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?“ நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.யோபு 15:8 யோபு 22:2 யோபு 40:2 ஏசா 40:13 ஏசா 40:14 எரே 23:18 ரோம 11:34

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.