நியாயாதிபதிகள் 7:2-8 - WCV
2
ஆண்டவா கிதியோனை நோக்கி,”உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன்.இல்லையெனில்,”எம் கையே எம்மைக் காத்தது” என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.
3
இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும்.கிலயாது மலையை விட்டகலட்டும்” என்றார்.மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர்.பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்
4
ஆண்டவர் கிதியோனிடம்,”மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர்.அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா.அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். “இவன் உனடனுடன் செல்வான்” என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்:”இவன் உன்னுடன் செல்லமாட்டான்” என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான்” என்றார்.
5
அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார்.ஆண்டவர் கிதியோனிடம்,”நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து: முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து” என்றார்.
6
நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின் எண்ணிக்கை முந்நூறு.மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.
7
ஆண்டவர் கிதியோனிடம்,”நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன்.நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன்.
8
அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர்.அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார்.மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.