வேதாகமத்தை வாசி

Click to Subscribe

யோவான் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார்.
2மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.
3வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டு வந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர்.
4அவர்கள் இயேசுவிடம், ԇபோதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவு கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள்.
5மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர்?Ԉ என்று கேட்டனர்.
6யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.
7யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, ԇபாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்Ԉ என்றார்.
8பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.
9இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
10இயேசு அவளை ஏறிட்டுப் பார்த்து, ԇபெண்ணே, எல்லோரும் போய் விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?Ԉ என்று கேட்டார்.
11அதற்கு அவள், ԇஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லைԈ என்றாள். பிறகு இயேசு, ԇநானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதேԈ என்றார்.
12மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், ԇநானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின் பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்Ԉ என்றார்.
13ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், ԇஉன்னைக் குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாதுԈ என்றனர்.
14அதற்கு இயேசு, ԇஆம், என்னைப் பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
15சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப் பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை.
16ஆனால் நான் கணிக்கும் போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார்.
17இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கிறது.
18நானும் என்னைப் பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சிԈ என்றார்.
19மக்கள் அவரிடம் ԇஉன் பிதா எங்கே இருக்கிறார்?Ԉ என்று கேட்டார்கள். ԇநீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப் பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்Ԉ என்று பதிலுரைத்தார்.
20இயேசு தேவாலயத்தில் உபதேசம் செய்யும்பொழுது இவற்றைச் சொன்னார். எல்லோரும் பணம் செலுத்துகிற இடத்தில் இயேசு இருந்தார். ஆனால் எவரும் அவரைக் கைது செய்யவில்லை. இயேசுவிற்கு அந்த வேளை இன்னும் வரவில்லை.
21மீண்டும் இயேசு மக்களிடம், ԇநான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாதுԈ என்றார்.
22எனவே யூதர்கள் தங்களுக்குள், ԇஇயேசு தன்னைத் தானே கொன்று கொள்வாரா? அதனால் தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?Ԉ என்று கேட்டுக் கொண்டனர்.
23அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, ԇநீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.
24நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.Ԉ
25அதற்கு யூதர்கள், ԇநீங்கள் யார்?Ԉ என்று கேட்டார்கள். இயேசுவோ அவர்களிடம், ԇநான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான்.
26உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்Ԉ என்றார்.
27இயேசு யாரைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்.
28எனவே இயேசு மக்களிடம், ԇநீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்து கொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச்சொன்னேன் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
29என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லைԈ என்றார்.
30இவ்வாறு இயேசு சொல்லிக் கொண்டிருந்த போது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர்.
31இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, ԇநீங்கள் என் உபதேசத்தைக் கைக் கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள்.
32பின்னர் நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்Ԉ என்றார்.
33ԇநாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒரு போதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?Ԉ என்று யூதர்கள் கேட்டனர்.
34அதற்குப் பதிலாக, ԇநான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன்.
35ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார்.
36எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள்.
37நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
38என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்து கொண்டிருக்கிறீர்கள்Ԉ என்றார்.
39ԇஎங்கள் பிதா ஆபிரகாம்தான்Ԉ என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக ԇநீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும்.
40நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை.
41ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்Ԉ என்றார். ஆனால் யூதர்கள், ԇஎங்கள் பிதா யாரென்று தெரிந்து கொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரேԈ என்றனர்.
42இயேசு அவர்களிடம், ԇதேவன் தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என் மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார்.
43நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
44பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.
45நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை.
46உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?
47தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லைԈ என்றார்.
48யூதர்கள் இயேசுவிடம், ԇநாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?Ԉ என்று கேட்டனர்.
49ԇஎன்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை.
50நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி.
51நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்து போவதில்லைԈ என்றார் இயேசு.
52யூதர்களோ இயேசுவிடம், ԇஉனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் கூட இறந்து போய்விட்டார்கள். ஆனால் நீயோ, ԅஎன் உபதே சத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்து போவதில்லைԆ என்று கூறுகிறாய்.
53எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக் கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்து போனார். தீர்க்கதரிசிகளும் இறந்து போயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?Ԉ எனக் கேட்டனர்.
54இயேசு அவர்களிடம், ԇஎனக்கு நானே மகிமை அளித்துக் கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்.
55ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன்.
56உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்Ԉ என்றார்.
57யூதர்கள் இயேசுவிடம், ԇஎன்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லையே!Ԉ என்று கேட்டனர்.
58ԇநான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்Ԉ என்றார் இயேசு.
59இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.