புத்தகத்தின் பின்னணி, யாரால் எழுதப்பட்டது, எழுதப்பட்ட காலப்பகுதி மற்றும் அடிப்படையான செய்தி புத்தகத்தின் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க...

ரோம சிறையில் இருந்து பவுல் விடுவிக்கப்பட்ட பிறகு, நான்காவது மிஷனரி பயணத்தின்போது, 1 தீமோத்தேயு எழுதினார், பவுல் மீண்டும் பேரரசர் நீரோவினால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் அவர் 2 தீமோத்தேயு எழுதினார். அவரது முதல் சிறைத்தண்டனைக்கு மாறாக, அவர் ஒரு வாடகை வீட்டில் (அப்போஸ்தலர் 28: 30) வசித்த போது, இப்போது ஒரு சாதாரண குற்றவாளி போல (1: 16; 2: 9) சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு குளிர்ச்சியான சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் (4: 13). பவுல் தன்னுடைய வேலையைச் செய்து முடித்துவிட்டார் என்றும் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது (4: 6-8) என்பதை அறிந்திருந்தார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறத்தாழ கிபி 66-67 இடையில் எழுதப்பட்டது.
பவுல் ரோமிலிருந்த 2 வது முறையாக சிறைத்தண்டனை அனுபவித்தார், அவர் மரண தண்டனைக்குக் காத்திருக்கும்போது இந்த கடிதத்தை எழுதினார்.
யாருக்காக எழுதப்பட்டது
தீமோத்தேயுவே இரண்டாம் தீமோத்தேயு நிருபத்தின் முக்கிய வாசகர் ஆவார், ஆனால் அவர் விஷயங்களை சபைக்கு பகிர்ந்து கொண்டார்.
எழுதப்பட்ட நோக்கம்
இறுதியான உற்சாகத்தோடும் பாராட்டுகளோடும் பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த வேலையை தைரியத்தோடும் (1: 3-14), குறிக்கோளுடனும் (2: 1-26), மற்றும் விடாமுயற்சியுடனும் (3: 14-17; 4: 1-8) தொடரும்படி தீமோத்தேயுவை விட்டுச் செல்வதற்காக.
மையக் கருத்து
விசுவாசமுள்ள ஊழியத்திற்கு ஒரு பொறுப்பு
பொருளடக்கம்
1. ஊழியத்திற்கான உற்சாகம் — 1:1-18
2. ஊழியத்தில் முன்மாதிரி — 2:1-26
3. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கை — 3:1-17
4. உற்சாகத்தின் வார்த்தைகளும் ஆசிர்வாதமும் — 4:1-22
காப்புரிமை அறிவிப்பு
இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரை & புத்தகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இலவச வெளியீட்டிற்கு எங்கள் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் வெளியிடுபவைகளில் "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" என்ற அறிவிப்பைச் சேர்க்க வேண்டும். நாங்கள் மேற்கோளுக்கு பயன்படுத்தியது BSI வேதாகமம்.