புத்தகத்தின் பின்னணி, யாரால் எழுதப்பட்டது, எழுதப்பட்ட காலப்பகுதி மற்றும் அடிப்படையான செய்தி புத்தகத்தின் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க...
2 john
   அப்போஸ்தலனாகிய யோவான் ஆசிரியர் ஆவார். 2 யோவான் 1 இல் “மூப்பர்” என்று அவர் தன்னை விவரிக்கிறார். நிருபத்தின் தலைப்பு “2 யோவான்.” அப்போஸ்தலனாகிய யோவானின் பெயரைச் சுமக்கும் 3 நிருபங்களின் வரிசையில் இது இரண்டாவது ஆகும். 2 யோவான் நிருபத்தின் கவனமானது, தவறான போதகர்கள் யோவானின் சபைகளிடையே ஒரு ஊழியத்தை நடத்துகிறார்கள், மாற்றங்களை செய்ய முயலுகிறார்கள், கிறிஸ்தவ உபசரிப்பை தங்களுக்கு சாதகமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதாகும். 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 85-95 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
அநேகமாக எபேசுவில் எழுதப்பட்டிருக்கலாம்.
 
யாருக்காக எழுதப்பட்டது
இரண்டாவது யோவான், அன்பிற்குறிய பெண் மற்றும் அவரது குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு சபைக்கு எழுதப்பட்ட கடிதமாகும்.
 
எழுதப்பட்ட நோக்கம்
யோவானின் இரண்டாவது நிருபம் இந்த “பெண்மணி மற்றும், அவருடைய பிள்ளைகளின்” உண்மைத்தன்மையைப் பாராட்டுவதைக் காட்டவும், அன்பில் நடப்பதை உற்சாகப்படுத்தவும், தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் யோவான் எழுதினார். அவர் அவளுக்கு, தவறான போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை கொடுத்து, மற்றும் அவர் விரைவில் அவளை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கிறார். யோவான் அவளை “சகோதரி” என்று வாழ்த்துகிறார்.
 
மையக் கருத்து
விசுவாசியின் பகுத்தறிவு
 
பொருளடக்கம்
1. வாழ்த்துரை (1-3)
2. அன்பில் சத்தியத்தை பாதுகாத்தல் (4-11)
3. இறுதி வாழ்த்துக்கள் (12-13)

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.