புத்தகத்தின் பின்னணி, யாரால் எழுதப்பட்டது, எழுதப்பட்ட காலப்பகுதி மற்றும் அடிப்படையான செய்தி புத்தகத்தின் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க...

 revelation

அப்போஸ்தலனாகிய யோவான், தேவதூதன் மூலமாக தேவன் சொன்னவைகளை எழுதினவர் என்று தன்னைத்தானே குறிப்பிடுகிறார். ஜஸ்டின் மார்டையர், ஐரெனியஸ், ஹிப்போலிடஸ், தெர்துல்லியன், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமெண்ட் மற்றும் முர்டோரியன் போன்ற சபையின் ஆதி எழுத்தாளர்கள், அப்போஸ்தலனாகிய யோவானை, வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் என்று கூறுகின்றனர். வெளிப்படுத்தின விசேஷம், “வெளிப்பாடுகள்” வடிவத்தில், உபத்திரவத்தின் மத்தியில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்படி (தேவனுடைய இறுதியான வெற்றியில்) அடையாள கற்பனைகளைப் பயன்படுத்தும் யூத இலக்கியத்தின் ஒரு வகையாக எழுதப்பட்டிருக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிபி 95-96 க்கு இடையில் எழுதப்பட்டது.

யோவான் தீர்க்கதரிசனத்தைப் பெற்றபோது ஏகியன் கடலில் உள்ள ஒரு தீவான பத்மு தீவில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார், (1: 9).

யாருக்காக எழுதப்பட்டது

ஆசியாவில் ஏழு சபைகளுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதாக யோவான் கூறினார் (1: 4).

எழுதப்பட்ட நோக்கம்

இயேசு கிறிஸ்துவையும் (1: 1), அவருடைய ஆள்தத்துவம், அவருடைய வல்லமை, ஆகியவற்றை வெளிப்படுத்துவதும், சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறவைகளை அவருடைய ஊழியர்களுக்குக் காண்பிப்பதும் வெளிப்படுத்துதலின் நோக்கமாக இருக்கிறது. உலகமானது முடிவுக்கு வரும் மற்றும் நியாயத்தீர்ப்பு உண்டாகும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை இதுவாகும். இது நமக்கு பரலோகத்தைப்பற்றிய ஒரு சிறிய பார்வையைக் கொடுக்கிறது மற்றும் தங்கள் வஸ்திரங்களை வெண்மையாக பாதுகாத்துக் காத்திருக்கும் அனைவருக்கும் மகிமை காத்திருக்கிறது. வெளிப்படுத்தல், எல்லாக் கேடுகளுடனும் மிகுந்த உபத்திரவத்தின் வழியாக நம்மை எடுத்துச் செல்கிறது. எல்லா அவிசுவாசிகளும் நித்தியத்திற்காக எதிர்கொள்ளும் கடைசி அக்கினியைப் பற்றியும் சொல்கிறது. புத்தகம் சாத்தானின் வீழ்ச்சி மற்றும் அவனது தூதர்கூட்டமும் கட்டிப் பிணைக்கப்படுவதை மீண்டும் கூறுகிறது.

மையக் கருத்து

அறிமுகப்படுத்துதல்

பொருளடக்கம்

  1. கிறிஸ்துவின் வெளிப்பாடு மற்றும் இயேசுவின் சாட்சி — 1:1-8
  2. நீங்கள் பார்த்திருக்கிற காரியங்கள் — 1:9-20
  3. ஏழு உள்ளூர் சபைகள் — 2:1-3:22
  4. சம்பவிக்கப்போகும் விஷயங்கள் — 4:1-22:5

5. கர்த்தரின் கடைசி எச்சரிக்கையும், அப்போஸ்தலனின் கடைசி ஜெபமும் — 22:6-21

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.