“அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல். (தீத்து 2:6).
கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு. அப்போஸ்தலனாகிய பவுல் நிருபத்தை எழுதி அனுப்புகையிலே, இளைஞர்களை ஒரு சிறப்பனவர்களாகக் கருதி அவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றிக் குறிப்பிட்ட பிறகு அவர், இந்த அர்த்தமுடைய புத்திமதியைக் கூறுகிறார். 'அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல் (தீத்து 2:6). அப்போஸ்தலனாகிய பவுலினுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்கு கரிசனையோடு நான் ஒருசில புத்திமதிகளைக் கூறப் போகிறேன். இப்பொழுது நான் வயது முதிர்ந்தவன். ஆனால், எனது வாலிப நாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. சந்தோஷங்களும். கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும். சோதனைகளும், துன்பங்களும். தவறான புரிதல்களும், தவறாக செலுத்திய அன்புகளும். அறியாமல் செய்த தவறுகளும், ஆசைகளும் எப்படி ஒரு வாலிபனை வாலிபநாட்களில் சூழ்ந்து இருந்திருக்கிறது என்பதற்கு நான் என் வாழ்கையிலே நிறைய உதாரணங்களை வைத்திருக்கிறேன். ஆகவே என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் சொல்லுகிற ஏதாவது ஒருசில காரியங்கள். சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களைப் பாவத்திலிருந்து காத்துக் கொண்டு, நித்தியவாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தி கொண்டுசெல்லுமானால் நான் மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன்.
இந்த புத்தகத்தில் நான் குறிப்பிட விரும்பும் நான்கு காரியங்களை பார்ப்போம்.
- இளைஞர்களுக்கு புத்திமதிகளை சொல்வதற்கான பொதுவான காரணங்களை குறிப்பிடுகிறேன்.
- இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சில ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கிறேன்.
- இளைஞர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய சில பொதுவான புத்திமதிகளைக் குறிப்பிடுகிறேன்
- 4. சில ஒழுங்கு நடவடிக்கைகளை கட்டளையாகவும் குறிப்பிடுகிறேன். அவைகளை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென புத்தி சொல்லுகிறேன்.
இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் தேவனிடம் ஜெபிக்கிறேன்.