1 | நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். | 2கொரி 5:18-20 1கொரி 3:9 |
2 | ‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்’ எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! | ஏசா 49:8 ஏசா 61:2 எசே 16:8 லூக் 4:19 லூக் 19:42-44 எபிரெ 3:7 எபிரெ 3:13 எபிரெ 4:7 |
3 | எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. | 2கொரி 1:12 2கொரி 8:20 மத் 17:27 மத் 18:6 ரோம 14:13 1கொரி 8:9-13 1கொரி 9:12 1கொரி 9:22 1கொரி 10:23 1கொரி 10:24 1கொரி 10:32 1கொரி 10:33 |
4 | மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்: வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். | 2கொரி 2:17 2கொரி 7:11 அப் 2:22 ரோம 14:18 ரோம 16:10 1கொரி 9:11 1தெச 2:3-11 1தீமோ 2:15 |
5 | நாங்கள் அடிக்கப்பட்டோம்: சிறையில் அடைக்கப்பட்டோம்: குழப்பங்களில் சிக்கினோம்: பாடுபட்டு உழைத்தோம்: கண்விழித்திருந்தோம்: பட்டினி கிடந்தோம்: | 2கொரி 11:23-25 உபா 25:3 ஏசா 53:5 அப் 16:23 |
6 | தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்: | 2கொரி 7:2 1தெச 2:10 1தீமோ 4:12 1தீமோ 5:2 தீத் 2:7 |
7 | உண்மையையே பேசி வருகிறோம்: கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலாம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். | 2கொரி 1:18-20 2கொரி 4:2 2கொரி 7:14 சங் 119:43 எபே 1:13 எபே 4:21 கொலோ 1:5 2தீமோ 2:15 யாக் 1:18 |
8 | போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல: புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். | அப் 4:21 அப் 5:13 அப் 5:40 அப் 5:41 அப் 14:11-20 அப் 16:20-22 அப் 16:39-22 அப் 28:4-10 1கொரி 4:10-13 |
9 | அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. | அப் 17:18 அப் 21:37 அப் 21:38 அப் 25:14 அப் 25:15 அப் 25:19 அப் 25:26 1கொரி 4:9 |
10 | துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். | 2கொரி 2:4 2கொரி 7:3-10 மத் 5:4 மத் 5:12 லூக் 6:21 யோவா 16:22 அப் 5:41 அப் 16:25 ரோம 5:2 ரோம 5:3 ரோம 9:2 ரோம 12:15 ரோம 15:13 பிலிப் 4:4 1தெச 3:7-10 1தெச 5:16 எபிரெ 10:34 யாக் 1:2-4 1பேது 1:6-8 1பேது 4:13 |
11 | கொரிந்தயரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை. | கலா 3:1 பிலிப் 4:15 |
12 | நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்: எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. | பிரச 6:9 யோபு 36:16 நீதி 4:12 மீகா 2:7 |
13 | பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்: எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள். | 1கொரி 4:14 1கொரி 4:15 கலா 4:19 1தெச 2:11 எபிரெ 12:5 எபிரெ 12:6 1யோவா 2:1 1யோவா 2:12-14 1யோவா 3:7 1யோவா 3:18 3யோவா 1:4 |
14 | நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? | யாத் 34:16 லேவி 19:19 உபா 7:2 உபா 7:3 உபா 22:9-11 எஸ்றா 9:1 எஸ்றா 9:2 எஸ்றா 9:11 எஸ்றா 9:12 எஸ்றா 10:19 நெகே 13:1-3 நெகே 13:23-26 சங் 106:35 நீதி 22:24 மல்கி 2:11 மல்கி 2:15 1கொரி 5:9 1கொரி 7:39 1கொரி 15:33 யாக் 4:4 |
15 | கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? | 1சாமு 5:2-4 1இரா 18:21 1கொரி 10:20 1கொரி 10:21 |
16 | கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. ‘என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்! ‘ என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! | யாத் 20:3 யாத் 23:13 யாத் 34:14 உபா 4:23 உபா 4:24 உபா 5:7 உபா 6:14 உபா 6:15 யோசு 24:14-24 1சாமு 7:3 1சாமு 7:4 1இரா 18:21 2இரா 17:33 2இரா 17:34 2இரா 21:4 2இரா 21:5 2இரா 23:5-7 2நாளா 33:4 2நாளா 33:5 எசே 36:25 ஓசி 14:8 செப் 1:5 மத் 6:24 1யோவா 5:20 1யோவா 5:21 |
17 | எனவே, ‘அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்: அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்’ என்கிறார் ஆண்டவர். ‘தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். | 2கொரி 7:1 எண் 16:21 எண் 16:26 எண் 16:45 எஸ்றா 6:21 எஸ்றா 10:11 சங் 1:1-3 நீதி 9:6 ஏசா 52:11 எரே 51:6 அப் 2:40 வெளிப் 18:4 |
18 | மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்: நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்’ என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர். | சங் 22:30 எரே 3:19 எரே 31:1 எரே 31:9 ஓசி 1:9 ஓசி 1:10 யோவா 1:12 ரோம 8:14-17 ரோம 8:29-17 கலா 3:26 கலா 4:5-7 எபே 1:5 1யோவா 3:1 1யோவா 3:2 வெளிப் 21:7 |