1 | உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? | மத் 18:15-17 அப் 18:14 அப் 18:15 அப் 19:38 |
2 | இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? | சங் 49:14 சங் 149:5-9 தானி 7:18 தானி 7:22 சகரி 14:5 மத் 19:28 லூக் 22:30 1தெச 3:13 யூதா 1:14 யூதா 1:15 வெளிப் 2:26 வெளிப் 2:27 வெளிப் 3:21 வெளிப் 20:4 |
3 | வான தூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக் கொள்ள முடியாதா? | மத் 25:41 2பேது 2:4 யூதா 1:6 |
4 | அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி? | 1கொரி 5:12 |
5 | நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? | 1கொரி 4:14 1கொரி 11:14 1கொரி 15:34 |
6 | சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? | 1கொரி 6:1 1கொரி 6:7 ஆதி 13:7-9 ஆதி 45:24 நெகே 5:8 நெகே 5:9 சங் 133:1-3 அப் 7:26 பிலிப் 2:14 பிலிப் 2:15 1யோவா 2:9-11 1யோவா 3:11-15 |
7 | நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? | நீதி 2:5 நீதி 2:8-10 ஓசி 10:2 யாக் 4:1-3 |
8 | ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்: வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்: அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள். | லேவி 19:13 மீகா 2:2 மல்கி 3:5 மாற் 10:19 கொலோ 3:25 1தெச 4:6 யாக் 5:4 |
9 | தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்: பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், | 1கொரி 6:2 1கொரி 6:3 1கொரி 6:15 1கொரி 6:16 1கொரி 6:19 1கொரி 3:16 1கொரி 9:24 |
10 | திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. | சங் 50:17 சங் 50:18 ஏசா 1:23 எரே 7:11 எசே 22:13 எசே 22:27 எசே 22:29 மத் 21:19 மத் 23:14 மத் 23:33 யோவா 12:6 எபே 4:28 1தெச 4:6 1பேது 4:15 |
11 | உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்: கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள். | 1கொரி 12:2 ரோம 6:17-19 எபே 2:1-3 எபே 4:17-22 எபே 5:8 கொலோ 3:5-7 தீத் 3:3-6 1பேது 4:2 1பேது 4:3 |
12 | “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு “: ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு “: ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். | 1கொரி 10:23 ரோம 14:14 |
13 | “வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு. “ இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். | மத் 15:17 மத் 15:20 மாற் 7:19 ரோம 14:17 |
14 | ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். | 1கொரி 15:15-20 அப் 2:24 அப் 17:31 ரோம 6:4-8 ரோம 8:11 2கொரி 4:14 பிலிப் 3:10 பிலிப் 3:11 1தெச 4:14 |
15 | உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது. | 1கொரி 6:19 1கொரி 11:3 1கொரி 12:27 ரோம 12:5 எபே 1:22 எபே 1:23 எபே 4:12 எபே 4:15 எபே 4:16 எபே 5:23 எபே 5:30 கொலோ 2:19 |
16 | விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓரடலாகிறான் என்று தெரியாதா? “இருவரும் ஒரே உடலாயிருப்பர் “ என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே! | ஆதி 34:31 ஆதி 38:15 ஆதி 38:24 நியா 16:1 மத் 21:31 மத் 21:32 எபிரெ 11:31 |
17 | ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். | 1கொரி 12:13 யோவா 3:6 யோவா 17:21-23 எபே 4:3 எபே 4:4 எபே 5:30 பிலிப் 2:5 |
18 | எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். | ஆதி 39:12-18 நீதி 2:16-19 நீதி 5:3-15 நீதி 6:24-32 நீதி 7:5-23 நீதி 7:24-27 நீதி 9:16-18 ரோம 6:12 ரோம 6:13 2தீமோ 2:22 எபிரெ 13:4 1பேது 2:11 |
19 | உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. | 1கொரி 6:15 1கொரி 6:16 |
20 | கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள். | 1கொரி 7:23 அப் 20:28 கலா 3:13 எபிரெ 9:12 1பேது 1:18 2பேது 2:1 வெளிப் 5:9 |