இணை வசன வேதாகமம்

1கொரிந்தியர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை.1கொரி 1:11 ஆதி 37:2 1சாமு 2:24
2இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?1கொரி 5:6 1கொரி 4:6-8 1கொரி 4:18-8
3நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.2கொரி 10:1 2கொரி 10:11 2கொரி 13:2 கொலோ 2:5 1தெச 2:17
4நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு,அப் 3:6 அப் 4:7-12 அப் 4:30-12 அப் 16:18 எபே 5:20 கொலோ 3:17
5அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.1கொரி 5:13 யோபு 2:6 சங் 109:6 2கொரி 2:6 2கொரி 10:6 2கொரி 13:10 அப் 26:18 1தீமோ 1:20
6நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?1கொரி 5:2 1கொரி 3:21 1கொரி 4:18 1கொரி 4:19 யாக் 4:16
7எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.1கொரி 5:13 யாத் 12:15 யாத் 13:6 யாத் 13:7 எபே 4:22 கொலோ 3:5-9
8ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.யாத் 12:15 யாத் 13:6 லேவி 23:6 எண் 28:16 எண் 28:17 உபா 16:16 ஏசா 25:6
9பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்.1கொரி 5:2 1கொரி 5:7 சங் 1:1 சங் 1:2 நீதி 9:6 2கொரி 6:14 2கொரி 6:17 எபே 5:11 2தெச 3:14
10ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் ஈடுபடுவோர், போராசையுடையோர், கொள்ளையடிப்போர், சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே!1கொரி 10:27
11உங்கள் நடுவில் “சகோதரர் “ அல்லது “சகோதரி “ என்னும் பெயரை வைத்துக்கொண்டு பரத்தைமையில் ஈடுபடுவராகவோ பேராசையுடையவராகவோ சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன்: அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.1கொரி 6:6 1கொரி 7:12 1கொரி 7:15 1கொரி 8:11 மத் 18:17 அப் 9:17 ரோம 16:17 2தெச 3:6 2தெச 3:14 2யோவா 1:10
12திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.லூக் 12:14 யோவா 18:36
13உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.சங் 50:6 அப் 17:31 ரோம 2:16 எபிரெ 13:4 2பேது 2:9

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.