1 | பரிசேயர் ஒருவர் இருந்தார்: அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். | யோவா 3:10 யோவா 7:47-49 |
2 | அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார். | யோவா 7:50 யோவா 7:51 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 19:39 நியா 6:27 ஏசா 51:7 பிலிப் 1:14 |
3 | இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார். | யோவா 1:51 மத் 5:18 2கொரி 1:19 2கொரி 1:20 வெளிப் 3:14 |
4 | நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார். | யோவா 3:3 யோவா 4:11 யோவா 4:12 யோவா 6:53 யோவா 6:60 1கொரி 1:18 1கொரி 2:14 |
5 | இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். | யோவா 3:3 ஏசா 44:3 ஏசா 44:4 எசே 36:25-27 மத் 3:11 மாற் 16:16 அப் 2:38 எபே 5:26 தீத் 3:4-7 1பேது 1:2 1பேது 3:21 1யோவா 5:6-8 |
6 | மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். | ஆதி 5:3 ஆதி 6:5 ஆதி 6:12 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 51:10 ரோம 7:5 ரோம 7:18 ரோம 7:25 ரோம 8:1 ரோம 8:4 ரோம 8:5-9 ரோம 8:13-9 1கொரி 15:47-49 2கொரி 5:17 கலா 5:16-21 கலா 5:24-21 எபே 2:3 கொலோ 2:11 |
7 | நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். | யோவா 3:12 யோவா 5:28 யோவா 6:61-63 |
8 | காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார். | யோபு 37:10-13 யோபு 37:16-13 யோபு 37:17-13 யோபு 37:21-23 சங் 107:25 சங் 107:29 பிரச 11:4 பிரச 11:5 எசே 37:9 அப் 2:2 அப் 4:31 1கொரி 2:11 1கொரி 12:11 |
9 | நிக்கதேம் அவரைப் பார்த்தது, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். | யோவா 3:4 யோவா 6:52 யோவா 6:60 நீதி 4:18 ஏசா 42:16 மாற் 8:24 மாற் 8:25 லூக் 1:34 |
10 | அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! | ஏசா 9:16 ஏசா 29:10-12 ஏசா 56:10 எரே 8:8 எரே 8:9 மத் 11:25 மத் 15:14 மத் 22:29 |
11 | எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்: நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். | யோவா 3:3 யோவா 3:5 |
12 | மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? | யோவா 3:3 யோவா 3:5 யோவா 3:8 1கொரி 3:1 1கொரி 3:2 எபிரெ 5:11 1பேது 2:1-3 |
13 | “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. | யோவா 1:18 யோவா 6:46 உபா 30:12 நீதி 30:4 அப் 2:34 ரோம 10:6 எபே 4:9 |
14 | பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். | எண் 21:7-9 2இரா 18:4 |
15 | அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். | யோவா 3:16 யோவா 3:36 யோவா 1:12 யோவா 6:40 யோவா 6:47 யோவா 11:25 யோவா 11:26 யோவா 12:44-46 யோவா 20:31 ஏசா 45:22 மாற் 16:16 அப் 8:37 அப் 16:30 அப் 16:31 ரோம 5:1 ரோம 5:2 ரோம 10:9-14 கலா 2:16 கலா 2:20 எபிரெ 7:25 எபிரெ 10:39 1யோவா 5:1 1யோவா 5:11-13 |
16 | தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். | லூக் 2:14 ரோம 5:8 2கொரி 5:19-21 தீத் 3:4 1யோவா 4:9 1யோவா 4:10 1யோவா 4:19 |
17 | உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். | யோவா 5:45 யோவா 8:15 யோவா 8:16 யோவா 12:47 யோவா 12:48 லூக் 9:56 |
18 | அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை: ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. | யோவா 3:36 யோவா 5:24 யோவா 6:40 யோவா 6:47 யோவா 20:31 ரோம 5:1 ரோம 8:1 ரோம 8:34 1யோவா 5:12 |
19 | ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. | யோவா 1:4 யோவா 1:9-11 யோவா 8:12 யோவா 9:39-41 யோவா 15:22-25 மத் 11:20-24 லூக் 10:11-16 லூக் 12:47 ரோம 1:32 2கொரி 2:15 2கொரி 2:16 2தெச 2:12 எபிரெ 3:12 எபிரெ 3:13 |
20 | தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. | யோவா 7:7 1இரா 22:8 யோபு 24:13-17 சங் 50:17 நீதி 1:29 நீதி 4:18 நீதி 5:12 நீதி 15:12 ஆமோ 5:10 ஆமோ 5:11 லூக் 11:45 யாக் 1:23-25 |
21 | உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். | யோவா 1:47 யோவா 5:39 சங் 1:1-3 சங் 119:80 சங் 119:105 சங் 139:23 சங் 139:24 ஏசா 8:20 அப் 17:11 அப் 17:12 1யோவா 1:6 |
22 | இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். | யோவா 2:13 யோவா 4:3 யோவா 7:3 |
23 | யோவானும் சலீPம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். | ஆதி 33:18 |
24 | யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. | மத் 4:12 மத் 14:3 மாற் 6:17 லூக் 3:19 லூக் 3:20 லூக் 9:7-9 |
25 | ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. | யோவா 2:6 மத் 3:11 மாற் 7:2-5 மாற் 7:8-5 எபிரெ 6:2 எபிரெ 9:10 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 9:23 1பேது 3:21 |
26 | அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள். | எண் 11:26-29 பிரச 4:4 1கொரி 3:3-5 கலா 5:20 கலா 5:21 கலா 6:12 கலா 6:13 யாக் 3:14-18 யாக் 4:5 யாக் 4:6 |
27 | யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. | எண் 16:9-11 எண் 17:5 1நாளா 28:4 1நாளா 28:5 எரே 1:5 எரே 17:16 ஆமோ 7:15 மத் 25:15 மாற் 13:34 ரோம 1:5 ரோம 12:6 1கொரி 1:1 1கொரி 2:12-14 1கொரி 3:5 1கொரி 4:7 1கொரி 12:11 1கொரி 15:10 கலா 1:1 எபே 1:1 எபே 3:7 எபே 3:8 1தீமோ 2:7 யாக் 1:17 1பேது 4:10 1பேது 4:11 |
28 | “நான் மெசியா அல்ல: மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்” என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். | யோவா 1:20 யோவா 1:25 யோவா 1:27 |
29 | மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்: அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. | சங் 45:9-17 உன்ன 3:11 உன்ன 4:8-12 ஏசா 54:5 ஏசா 62:4 ஏசா 62:5 எரே 2:2 எசே 16:8 ஓசி 2:19 மத் 22:2 2கொரி 11:2 எபே 5:25-27 வெளிப் 19:7-9 வெளிப் 21:9 |
30 | அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்: எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார். | சங் 72:17-19 ஏசா 9:7 ஏசா 53:2 ஏசா 53:3 ஏசா 53:12 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 மத் 13:31-33 வெளிப் 11:15 |
31 | மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். | யோவா 3:13 யோவா 6:33 யோவா 8:23 எபே 1:20 எபே 1:21 எபே 4:8-10 |
32 | தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. | யோவா 3:11 யோவா 5:20 யோவா 8:26 யோவா 15:15 |
33 | அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். | ரோம 3:3 ரோம 3:4 ரோம 4:18-21 2கொரி 1:18 தீத் 1:1 தீத் 1:2 எபிரெ 6:17 1யோவா 5:9 1யோவா 5:10 |
34 | கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். | யோவா 7:16 யோவா 8:26-28 யோவா 8:40-28 யோவா 8:47-28 |
35 | தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். | யோவா 5:20 யோவா 5:22 யோவா 15:9 யோவா 17:23 யோவா 17:26 நீதி 8:30 ஏசா 42:1 மத் 3:17 மத் 17:5 |
36 | மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும். | யோவா 3:15 யோவா 3:16 யோவா 1:12 யோவா 5:24 யோவா 6:47-54 யோவா 10:28 ஆபகூ 2:4 ரோம 1:17 ரோம 8:1 1யோவா 3:14 1யோவா 3:15 1யோவா 5:10-13 |