அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி,“இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான் “ என்றான். அதற்கு யோசபாத்து,“அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம் “ என்றான்.