1 | முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும், | 1தீமோ 5:19 1தீமோ 5:20 லேவி 19:32 உபா 33:9 கலா 2:11-14 |
2 | வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு. | 1தீமோ 5:3 மத் 12:50 யோவா 19:26 யோவா 19:27 |
3 | கைம்பெண்களுக்கு மதிப்புக்கொடு. ஆதரவற்ற கைம்பெண்களையே இங்குக் குறிப்பிடுகிறேன். | 1தீமோ 5:2 1தீமோ 5:17 யாத் 20:12 மத் 15:6 1தெச 2:6 1பேது 2:17 1பேது 3:7 |
4 | பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ உடைய கைம்பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இறைப்பற்றிற்கு ஏற்ப முதலில் தங்கள் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும் பெற்றோருக்கு நன்றிக்கடன் ஆற்றவும் கற்றுக் கொள்ளட்டும். இதுவே கடவுளின் முன்னிலையில் ஏற்புடையது. | நியா 12:14 யோபு 18:19 ஏசா 14:22 |
5 | ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன் அல்லும் பகலும் மன்றாட்டிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருப்பாராக. | 1தீமோ 5:3 ரோம 1:5 ரோம 1:12 ரோம 1:20 ரோம 1:21 1கொரி 7:32 |
6 | சிற்றின்பத்தில் உழல்பவர்கள் நடைப் பிணங்களே. | 1சாமு 25:6 யோபு 21:11-15 சங் 73:5-7 ஏசா 22:13 ஆமோ 6:5 ஆமோ 6:6 லூக் 12:19 லூக் 15:13 லூக் 16:19 யாக் 5:5 வெளிப் 18:7 |
7 | கைம்பெண்கள் யாதொரு குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு வாழ இவற்றை அவர்களுக்குக் கட்டளையிடு. | 1தீமோ 1:3 1தீமோ 4:11 1தீமோ 6:17 2தீமோ 4:1 தீத் 1:13 தீத் 2:15 |
8 | தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர். | ஆதி 30:30 ஏசா 58:7 மத் 7:11 லூக் 11:11-13 2கொரி 12:14 கலா 6:10 |
9 | அறுபது வயதுக்குக் குறையாத ஒருவரே கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர் ஒரு கணவரைக் கொண்டவராய் இருந்திருக்க வேண்டும். | 1தீமோ 5:3 1தீமோ 5:4 |
10 | அவர் பிள்ளைகளை வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் காலடிகளைக் கழுவுதல், இன்னலுற்றோருக்கு உதவி செய்தல் போன்ற அனைத்து நற்செயல்களில் ஈடுபட்டு அவற்றால் நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். | 1தீமோ 3:7 அப் 6:3 அப் 10:22 அப் 22:12 3யோவா 1:12 |
11 | இளம் கைம்பெண்களைப் பதிவு செய்யாதே. ஏனெனில் கிறிஸ்துவிடமிருந்து தங்களைப் பிரிக்கக்கூடிய தீய நாட்டம் எழும்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்: | 1தீமோ 5:9 1தீமோ 5:14 |
12 | தாங்கள் முதலில் கொடுத்த வாக்கை மீறினால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்: | 1கொரி 11:34 யாக் 3:1 1பேது 4:17 |
13 | அதோடு வீடுவீடாய்ச் சுற்றித் திரிந்து சோம்பேறிகளாக இருக்கக் கற்றுக் கொள்வார்கள். சோம்பேறிகளாக இருப்பது மட்டுமின்றி, தகாதவற்றைப் பேசி வம்பளக்கிறவர்களாகவும், பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும் இருப்பார்கள். | நீதி 31:27 2தெச 3:6-11 |
14 | எனவே, இளம் கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, வீட்டுத் தலைவிகளாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்: அப்போது எதிரி பழி தூற்ற எந்த வாய்ப்பும் இராது. | 1தீமோ 2:8 |
15 | ஏனென்றால் இவர்களுள் சிலர் ஏற்கெனவெ நெறிதவறிச் சாத்தானுக்குப் பின் சென்றுவிட்டார்கள். | பிலிப் 3:18 பிலிப் 3:19 2தீமோ 1:15 2தீமோ 2:18 2தீமோ 4:10 2பேது 2:2 2பேது 2:20-22 2பேது 3:16 1யோவா 2:19 யூதா 1:4 யூதா 1:5 வெளிப் 12:9 |
16 | நம்பிக்கை கொண்ட பெண் ஒருவரிடம் கைம்பெண்கள் இருந்தால், அவரே அவர்களுக்கு உதவி செய்யட்டும். திருச்சபையின்மீது அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனென்றால் அப்போதுதான் உண்மையிலேயே ஆதரவற்ற கைம்பெண்களுக்குத் திருச்சபை உதவி செய்ய முடியும். | 1தீமோ 5:4 1தீமோ 5:8 |
17 | சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள், சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள் இரு மடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாகக் கருதப்படவேண்டும். | 1தீமோ 3:5 மத் 24:25 லூக் 12:42 ரோம 12:8 1தெச 5:12 1தெச 5:13 எபிரெ 13:7 எபிரெ 13:17 எபிரெ 13:24 |
18 | ஏனென்றால், “போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே” என்றும், “வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே” என்றும் மறைநூல் கூறுகிறது. | ரோம 4:3 ரோம 9:17 ரோம 10:11 ரோம 11:2 கலா 3:8 யாக் 4:5 |
19 | ஒரு மூப்பருக்கு எதிரான குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே. | யோவா 18:29 அப் 24:2-13 அப் 25:16 தீத் 1:6 |
20 | பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர். | லேவி 19:17 கலா 2:11-14 2தீமோ 4:2 தீத் 1:13 |
21 | கடவுளின் முன்னிலையிலும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் தேர்ந்துகொள்ளப்பட்ட வான தூதர்களின் முன்னிலையிலும் உனக்கு நான் முன்னெச்சரிக்கையாகக் கூறுவது: நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து வா. முன்கூட்டியே முடிவெடுக்காதே. நடுநிலை தவறாதே. | 1தீமோ 6:13 1தெச 5:27 2தீமோ 2:14 2தீமோ 4:1 |
22 | அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தாதே. பிறருடைய பாவங்களில் பங்கு கொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாகக் காத்துக்கொள். | 1தீமோ 4:14 அப் 6:6 அப் 13:3 2தீமோ 1:6 எபிரெ 6:2 |
23 | தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து. | 1தீமோ 3:3 1தீமோ 4:4 லேவி 10:9-11 சங் 104:15 நீதி 31:4-7 எசே 44:21 எபே 5:18 தீத் 1:7 தீத் 2:3 |
24 | சிலருடைய பாவங்கள் வெளிப்படையானவை. அவர்களுடைய பாவங்கள் தீர்ப்புக்காக அவர்களுக்கு முன்னே சென்று சேர்கின்றன. வேறு சிலருடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னே வந்து சேர்கின்றன. | எரே 2:34 அப் 1:16-20 அப் 5:1-11 அப் 8:18 கலா 5:19-21 2தீமோ 4:10 2பேது 2:20 2பேது 2:21 |
25 | அவ்வாறே நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாதவையும் என்றுமே மறைந்திருக்க முடியாது. | 1தீமோ 3:7 மத் 5:16 அப் 9:36 அப் 10:22 அப் 16:1-3 அப் 22:12 கலா 5:22 கலா 5:23 பிலிப் 1:11 |