1 | சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருiகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: | ரோம 12:1 |
2 | ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்: திகிலுறவும் வேண்டாம். | ஏசா 7:2 ஏசா 8:12 ஏசா 8:13 ஏசா 26:3 மத் 24:6 மாற் 13:7 லூக் 21:9 லூக் 21:19 யோவா 14:1 யோவா 14:27 அப் 20:23 அப் 20:24 எபே 5:6 1தெச 3:3 |
3 | எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில் இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன். | மத் 24:4-6 1கொரி 6:9 எபே 5:6 |
4 | தெய்வம் என வழங்கப்படுவதையும் வழிபாட்டுக்குரிய அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக் கொள்வான். அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு, தன்னைக் கடவுளாகவும் காட்டிக் கொள்வான். | ஏசா 14:13 எசே 28:2 எசே 28:6 எசே 28:9 தானி 7:8 தானி 7:25 தானி 8:9-11 தானி 11:36 வெளிப் 13:6 |
5 | நான் உங்களோடு இருந்தபொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா? | மத் 16:9 மாற் 8:18 லூக் 24:6 லூக் 24:7 அப் 20:31 |
6 | அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே! | 2தெச 2:3 2தெச 2:8 |
7 | நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை, அது இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும். | 1தீமோ 3:16 வெளிப் 17:5 வெளிப் 17:7 |
8 | பின்னரே நெறிகெட்டவன் தோன்றுவான். ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார்: அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும். | 2தெச 2:3 மத் 13:19 மத் 13:38 1யோவா 2:13 1யோவா 3:12 1யோவா 5:18 |
9 | அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான். | யோவா 8:41 யோவா 8:44 அப் 8:9-11 அப் 13:10 2கொரி 4:4 2கொரி 11:3 2கொரி 11:14 எபே 2:2 வெளிப் 9:11 வெளிப் 12:9 வெளிப் 12:17 வெளிப் 13:1-5 வெளிப் 18:23 வெளிப் 19:20 வெளிப் 20:10 |
10 | அழிந்து போகிறவர்களை முற்றிலும் ஏமாற்றித் தீங்கிழைப்பான். ஏனெனில் அவர்கள் தங்களை மீட்க வல்ல உண்மையின்பால் ஆர்வம் காட்ட மறுத்தனர். | ரோம 16:18 2கொரி 2:17 2கொரி 4:2 2கொரி 11:13 2கொரி 11:15 எபே 4:14 2பேது 2:18 எபிரெ 3:13 |
11 | ஆகவே பொய்யானதை அவர்கள் நம்பும்வண்ணம் கடவுள் அவர்களை வஞ்சக ஆற்றலுக்கு உட்படுத்தினார். | சங் 81:11 சங் 81:12 சங் 109:17 ஏசா 29:9-14 யோவா 12:39-43 ரோம 1:21-25 ரோம 1:28-25 |
12 | இவ்வாறு உண்மையைப் பற்றிக்கொண்டு வாழாது தீமையில் இன்பம் காணும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவர். | உபா 32:35 மாற் 16:16 யோவா 3:36 1தெச 5:9 2பேது 2:3 யூதா 1:4 யூதா 1:5 |
13 | ஆண்டவரால் அன்புகூரப்பட்ட சகோதர சகோதரிகளே! நாங்கள் கடவுளுக்கு உங்கள்பொருட்டு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் தூய ஆவியால் தூய்மையாக்கப்பட்டு, நீங்கள் உண்மையை நம்பி மீட்பு அடையும்படி, கடவுள் உங்களை முதன்முதலாகத் தேர்ந்துகொண்டார். | 2தெச 1:3 ரோம 1:8 ரோம 6:17 |
14 | நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். | ரோம 8:28-30 1தெச 2:12 1பேது 5:10 |
15 | ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். | 1கொரி 15:58 1கொரி 16:13 பிலிப் 4:1 |
16 | நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் | 2தெச 1:1 2தெச 1:2 ரோம 1:7 1தெச 3:11 |
17 | உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! | 2தெச 2:16 ஏசா 51:3 ஏசா 51:12 ஏசா 57:15 ஏசா 61:1 ஏசா 61:2 ஏசா 66:13 ரோம 15:13 2கொரி 1:3-6 |