ஏசாயா 29:9-14 - WCV
9
திகிலடையுங்கள்: திகைத்து நில்லுங்கள்: குருடரைப்போல் இருங்கள்: பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்ததால் அல்ல: தடுமாறுங்கள்: ஆனால் மதுவால் அல்ல.
10
ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்: இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்: திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.
11
ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர் “என்னால் இயலாது: இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.
12
எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப்படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத் தெரியாதே” என்பார்.
13
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!
14
ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்: அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.