மத்தேயு 24:4-6 - WCV
4
அதற்கு இயேசு கூறியது: “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5
ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, “நானே மெசியா “ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.
6
போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.