1 | தூய ஆவியார் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் ஏமாற்றும் ஆவிகளுக்கும் பேய்களின் போதனைகளுக்கும் செவிசாய்த்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவர். | யோவா 16:13 அப் 13:2 அப் 28:25 1கொரி 12:11 1யோவா 2:18 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
2 | அலகைக்கு உரியவர் என்னும் குறியிடப்பட்ட மனச்சான்று உடைய பொய்யர்களின் வெளி வேடத்தால் கவரப்படுவர். | 1இரா 13:18 1இரா 22:22 ஏசா 9:15 எரே 5:21 எரே 23:14 எரே 23:32 தானி 8:23-25 மத் 7:15 மத் 24:24 அப் 20:30 ரோம 16:18 எபே 4:14 2தீமோ 3:5 2பேது 2:1-3 வெளிப் 16:14 |
3 | அந்தப் பொய்யர்கள் திருமணத்தைத் தடை செய்கிறார்கள்: சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்: ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்துள்ளார். | தானி 11:37 1கொரி 7:28 1கொரி 7:36-39 எபிரெ 13:4 |
4 | கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை. | ஆதி 1:31 உபா 32:4 |
5 | ஏனெனில் கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும். | 1தீமோ 4:3 லூக் 11:41 1கொரி 7:14 தீத் 1:15 |
6 | இவற்றைச் சகோதரர் சகோதரிகளுக்கு எடுத்துக் கூறினால் நீ கிறிஸ்து இயேசுவின் நல்ல தொண்டனாய் இருப்பாய். நீ பின்பற்றி வருகிற விசவாசக்கோட்பாடுகளாலும் நற்போதனைகளாலும் வளர்ச்சி பெறுவாய். | அப் 20:31 அப் 20:35 ரோம 15:15 1கொரி 4:17 2தீமோ 1:6 2தீமோ 2:14 2பேது 1:12-15 2பேது 3:1 2பேது 3:2 யூதா 1:5 |
7 | உலகப் போக்கிலான புனைகதைகளையும் பாட்டிக் கதைகளையும் விட்டுவிலகு. இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய். | 1தீமோ 1:4 1தீமோ 6:20 2தீமோ 2:16 2தீமோ 2:23 2தீமோ 4:4 தீத் 1:14 தீத் 3:9 |
8 | ஏனென்றால் உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும். இது இம்மையிலும் மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம் என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது. | 1சாமு 15:22 சங் 50:7-15 ஏசா 1:11-16 ஏசா 58:3-5 எரே 6:20 ஆமோ 5:21-24 1கொரி 8:8 கொலோ 2:21-23 எபிரெ 13:9 |
9 | இக்கூற்று உண்மையானது: எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. | 1தீமோ 1:15 |
10 | வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர். | 1கொரி 4:9-13 2கொரி 4:8-10 2கொரி 6:3-10 2கொரி 11:23-27 2தீமோ 2:9 2தீமோ 2:10 2தீமோ 3:10-12 எபிரெ 11:26 எபிரெ 13:13 1பேது 4:14 1பேது 4:15 |
11 | இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா. | 1தீமோ 6:2 2தீமோ 4:2 தீத் 2:15 தீத் 3:8 |
12 | நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. | மத் 18:10 1கொரி 16:10 1கொரி 16:11 2தீமோ 2:7 2தீமோ 2:15 2தீமோ 2:22 |
13 | நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து. | 1தீமோ 3:14 1தீமோ 3:15 |
14 | இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே. | மத் 25:14-30 லூக் 19:12-26 ரோம 12:6-8 1தெச 5:19 2தீமோ 1:6 1பேது 4:9-11 |
15 | இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும். | யோசு 1:8 சங் 1:2 சங் 19:14 சங் 49:3 சங் 63:6 சங் 77:12 சங் 104:34 சங் 105:5 சங் 119:15 சங் 119:23 சங் 119:48 சங் 119:97 சங் 119:99 சங் 119:148 சங் 143:5 |
16 | உன்னைப்பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு: அவைகளில் நிலைத்திரு: இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்: உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர். | 1நாளா 28:10 2நாளா 19:6 மாற் 13:9 லூக் 21:34 அப் 20:28 1கொரி 3:10 1கொரி 3:11 கொலோ 4:17 2தீமோ 4:2 தீத் 2:7 தீத் 2:15 எபிரெ 12:15 2யோவா 1:8 |