7
என் மக்களே, கேளுங்கள்: நான் பேசுகின்றேன்: இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்: கடவுளாகிய நானே உன் இறைவன்:
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை: உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக் கொள்வதில்லை.
10
ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்: ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.
11
குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்: சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை.
12
எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை: ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.
13
எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ?
14
கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்: உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.
15
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்: உங்களைக் காத்திடுவேன்: அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.