இணை வசன வேதாகமம்

1தெசலோனிக்கேயர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை.மத் 24:3 மத் 24:36 மாற் 13:30-32 அப் 1:7
2ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.எரே 23:20
3“எங்கும் அமைதி, ஆபத்து இல்லை” என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.உபா 29:19 நியா 18:27 நியா 18:28 சங் 10:11-13 ஏசா 21:4 ஏசா 56:12 தானி 5:3-6 நாகூ 1:10 மத் 24:37-39 லூக் 17:26-30 லூக் 21:34 லூக் 21:35
4ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.ரோம 13:11-13 கொலோ 1:13 1பேது 2:9 1பேது 2:10 1யோவா 2:8
5நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.லூக் 16:8 யோவா 12:36 அப் 26:18 எபே 5:8
6ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.நீதி 19:15 ஏசா 56:10 யோனா 1:6 மத் 13:25 மத் 25:5 மாற் 14:37 லூக் 22:46 ரோம 13:11-14 1கொரி 15:34 எபே 5:14
7உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்: குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்.யோபு 4:13 யோபு 33:15 லூக் 21:34 லூக் 21:35 ரோம 13:13 1கொரி 15:34 எபே 5:14
8ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.1தெச 5:5 ரோம 13:13 எபே 5:8 எபே 5:9 1பேது 2:9 1யோவா 1:7
9ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.1தெச 1:10 1தெச 3:3 யாத் 9:16 நீதி 16:4 எசே 38:10-17 மத் 26:24 அப் 1:20 அப் 1:25 அப் 13:48 ரோம 9:11-23 2தீமோ 2:19 2தீமோ 2:20 1பேது 2:8 2பேது 2:3 யூதா 1:4
10நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்.மத் 20:28 யோவா 10:11 யோவா 10:15 யோவா 10:17 யோவா 15:13 ரோம 5:6-8 ரோம 8:34 ரோம 14:8 ரோம 14:9 1கொரி 15:3 2கொரி 5:15 2கொரி 5:21 எபே 5:2 1தீமோ 2:6 தீத் 2:14 1பேது 2:24 1பேது 3:18
11ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்: ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.1தெச 4:18
12சகோதர சகோதரிகளே! உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.1கொரி 16:18 பிலிப் 2:19 எபிரெ 13:7 எபிரெ 13:17
13அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும்.மத் 10:40 1கொரி 4:1 1கொரி 4:2 1கொரி 9:7-11 கலா 4:14 கலா 6:6
14அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்: மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: வலுவற்றோர்க்கு உதவுங்கள்: எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.ரோம 12:1
15எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.ஆதி 45:24 1கொரி 16:10 எபே 5:15 எபே 5:33 1பேது 1:22 வெளிப் 19:10 வெளிப் 22:9
16எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.2கொரி 6:10 பிலிப் 4:4 மத் 5:12 லூக் 10:20 ரோம 12:12
17இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.லூக் 18:1 லூக் 21:36 ரோம 12:12 எபே 6:18 கொலோ 4:2 1பேது 4:7
18எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.எபே 5:20 பிலிப் 4:6 கொலோ 3:17 யோபு 1:21 சங் 34:1 எபிரெ 13:15
19தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.உன்ன 8:7 எபே 4:30 எபே 6:16
20இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.1தெச 4:8 எண் 11:25-29 1சாமு 10:5 1சாமு 10:6 1சாமு 10:10-13 1சாமு 19:20-24 அப் 19:6 1கொரி 11:4 1கொரி 12:10 1கொரி 12:28 1கொரி 13:2 1கொரி 13:9 1கொரி 14:1 1கொரி 14:3-6 1கொரி 14:22-25 1கொரி 14:29-32 1கொரி 14:37-39 எபே 4:11 எபே 4:12 வெளிப் 11:3-11
21அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.ஏசா 8:20 மத் 7:15-20 மாற் 7:14-16 லூக் 12:57 அப் 17:11 ரோம 12:2 1கொரி 2:11 1கொரி 2:14 1கொரி 2:15 1கொரி 14:28 எபே 5:10 பிலிப் 1:10 1யோவா 4:1 வெளிப் 2:2
22எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.1தெச 4:12 யாத் 23:7 ஏசா 33:15 மத் 17:26 மத் 17:27 ரோம 12:17 1கொரி 8:13 1கொரி 10:31-33 2கொரி 6:3 2கொரி 8:20 2கொரி 8:21 பிலிப் 4:8 யூதா 1:23
23அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக!ரோம 15:5 ரோம 15:13 ரோம 15:33 ரோம 16:20 1கொரி 14:33 2கொரி 5:19 பிலிப் 4:9 2தெச 3:16 எபிரெ 13:20 1பேது 5:10
24உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.உபா 7:9 சங் 36:5 சங் 40:10 சங் 86:15 சங் 89:2 சங் 92:2 சங் 100:5 சங் 138:2 சங் 146:6 ஏசா 25:1 புலம் 3:23 மீகா 7:20 யோவா 1:17 யோவா 3:33 1கொரி 1:9 1கொரி 10:13 2தெச 3:3 2தீமோ 2:13 தீத் 1:2 எபிரெ 6:17 எபிரெ 6:18
25சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.ரோம 15:30 2கொரி 1:11 எபே 6:18-20 பிலிப் 1:19 கொலோ 4:3 2தெச 3:1-3 பிலேமோ 1:22 எபிரெ 13:18 எபிரெ 13:19
26தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.ரோம 16:16 1கொரி 16:20
27அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.1தெச 2:11 எண் 27:23 1இரா 22:16 2நாளா 18:15 மத் 26:63 மாற் 5:7 அப் 19:13 1தீமோ 1:3 1தீமோ 1:18 1தீமோ 5:7 1தீமோ 5:21 1தீமோ 6:13 1தீமோ 6:17 2தீமோ 4:1
28நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!ரோம 1:7 ரோம 16:20 ரோம 16:24 2தெச 3:18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.