1 | சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். | 1கொரி 2:6 1கொரி 2:15 கலா 6:1 |
2 | நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். | எபிரெ 5:12-14 1பேது 2:2 |
3 | நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? | 1கொரி 1:11 1கொரி 6:1-8 1கொரி 11:18 2கொரி 12:20 கலா 5:15 கலா 5:19-21 யாக் 3:16 யாக் 4:1 யாக் 4:2 |
4 | ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்? | 1கொரி 1:12 1கொரி 4:6 |
5 | அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள். | 1கொரி 3:7 1கொரி 4:1 1கொரி 4:2 லூக் 1:2 ரோம 10:14 ரோம 10:15 2கொரி 3:6 2கொரி 4:5 2கொரி 4:7 2கொரி 6:1 2கொரி 6:4 2கொரி 11:23 |
6 | நான் நட்டேன்: அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்: கடவுளே விளையச் செய்தார். | 1கொரி 3:9 1கொரி 3:10 1கொரி 4:14 1கொரி 4:15 1கொரி 9:1 1கொரி 9:7-11 1கொரி 15:1-11 அப் 18:4-11 2கொரி 10:14 2கொரி 10:15 |
7 | நடுகிறவருக்கும் பெருமை இல்லை: நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. | 1கொரி 13:2 சங் 115:1 ஏசா 40:17 ஏசா 41:29 தானி 4:35 யோவா 15:5 2கொரி 12:9 கலா 6:3 |
8 | நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். | 1கொரி 3:9 1கொரி 4:6 யோவா 4:36-38 |
9 | நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம். | 1கொரி 3:6 மத் 9:37 மாற் 16:20 2கொரி 6:1 3யோவா 1:8 |
10 | கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். | 1கொரி 3:5 1கொரி 15:10 ரோம 1:5 ரோம 12:3 ரோம 15:15 எபே 3:2-8 கொலோ 1:29 1தீமோ 1:11-14 1பேது 4:11 |
11 | ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. | ஏசா 28:16 மத் 16:18 அப் 4:11 அப் 4:12 2கொரி 11:2-4 கலா 1:7-9 எபே 2:20 2தீமோ 2:19 1பேது 2:6-8 |
12 | அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம். | சங் 19:10 சங் 119:72 நீதி 8:10 நீதி 16:16 ஏசா 60:17 1தீமோ 4:6 2தீமோ 2:20 1பேது 1:7 வெளிப் 3:18 |
13 | ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்: தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும். | 1கொரி 3:14 1கொரி 3:15 1கொரி 4:5 2தீமோ 3:9 |
14 | ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார். | 1கொரி 3:8 1கொரி 4:5 தானி 12:3 மத் 24:45-47 மத் 25:21-23 1தெச 2:19 2தீமோ 4:7 1பேது 5:1 1பேது 5:4 வெளிப் 2:8-11 |
15 | ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார். | 1கொரி 3:12 1கொரி 3:13 வெளிப் 3:18 |
16 | நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? | 1கொரி 5:6 1கொரி 6:2 1கொரி 6:3 1கொரி 6:9 1கொரி 6:16 1கொரி 6:19 1கொரி 9:13 1கொரி 9:24 ரோம 6:3 யாக் 4:4 |
17 | ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது: நீங்களே அக்கோவில். | 1கொரி 6:18-20 லேவி 15:31 லேவி 20:3 எண் 19:20 சங் 74:3 சங் 79:1 எசே 5:11 எசே 7:22 எசே 23:38 எசே 23:39 செப் 3:4 |
18 | எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். | 1கொரி 6:9 1கொரி 15:33 நீதி 5:7 ஏசா 44:20 எரே 37:9 லூக் 21:8 கலா 6:3 கலா 6:7 எபே 5:6 2தீமோ 3:13 தீத் 3:3 யாக் 1:22 யாக் 1:26 1யோவா 1:8 |
19 | இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர். “ | 1கொரி 1:19 1கொரி 1:20 1கொரி 2:6 ஏசா 19:11-14 ஏசா 29:14-16 ஏசா 44:25 ரோம 1:21 ரோம 1:22 |
20 | மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார். “ | சங் 94:11 |
21 | எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. | 1கொரி 3:4-7 1கொரி 1:12-17 1கொரி 4:6 எரே 9:23 எரே 9:24 |
22 | அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. | 1கொரி 3:5-8 1கொரி 9:19-22 2கொரி 4:5 எபே 4:11 எபே 4:12 |
23 | ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்: கிறிஸ்து கடவுளுக்குரியவர். | 1கொரி 6:19 1கொரி 6:20 1கொரி 7:22 1கொரி 15:23 யோவா 17:9 யோவா 17:10 ரோம 14:8 2கொரி 10:7 கலா 3:29 கலா 5:24 |