ஏசாயா 19:11-14 - WCV
11
சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்: “நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?
12
அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும்.
13
சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்: நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்: எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள்.
14
ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்: போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள்.