1கொரிந்தியர் 3:4-7 - WCV
4
ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?
5
அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள்.
6
நான் நட்டேன்: அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்: கடவுளே விளையச் செய்தார்.
7
நடுகிறவருக்கும் பெருமை இல்லை: நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.