இணை வசன வேதாகமம்

ரோமர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்.ரோம 5:9 ரோம 5:18 ரோம 1:17 ரோம 3:22 ரோம 3:26-28 ரோம 3:30-28 ரோம 4:5 ரோம 4:24 ரோம 4:25 ரோம 9:30 ரோம 10:10 ஆபகூ 2:4 யோவா 3:16-18 யோவா 5:24 அப் 13:38 அப் 13:39 கலா 2:16 கலா 3:11-14 கலா 3:25-14 கலா 5:4-6 பிலிப் 3:9 யாக் 2:23-26
2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 அப் 14:27 எபே 2:18 எபே 3:12 எபிரெ 10:19 எபிரெ 10:20 1பேது 3:18
3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,ரோம 8:35-37 மத் 5:10-12 லூக் 6:22 லூக் 6:23 அப் 5:41 2கொரி 11:23-30 2கொரி 12:9 2கொரி 12:10 எபே 3:13 பிலிப் 1:29 பிலிப் 2:17 பிலிப் 2:18 யாக் 1:2 யாக் 1:3 யாக் 1:12 1பேது 3:14 1பேது 4:16 1பேது 4:17
4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம்.ரோம 15:4 2கொரி 1:4-6 2கொரி 4:8-12 2கொரி 6:9 2கொரி 6:10 யாக் 1:12 1பேது 1:6 1பேது 1:7 1பேது 5:10
5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.யோபு 27:8 சங் 22:4 சங் 22:5 ஏசா 28:15-18 ஏசா 45:16 ஏசா 45:17 ஏசா 49:23 எரே 17:5-8 பிலிப் 1:20 2தெச 2:16 2தீமோ 1:12 எபிரெ 6:18 எபிரெ 6:19
6நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.எசே 16:4-8 எபே 2:1-5 கொலோ 2:13 தீத் 3:3-5
7நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.யோவா 15:13 1யோவா 3:16
8ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.ரோம 5:20 ரோம 3:5 யோவா 15:13 எபே 1:6-8 எபே 2:7 1தீமோ 1:16
9ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?ரோம 5:1 ரோம 3:24-26 எபே 2:13 எபிரெ 9:14 எபிரெ 9:22 1யோவா 1:7
10நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!ரோம 8:7 2கொரி 5:18 2கொரி 5:19 2கொரி 5:21 கொலோ 1:20 கொலோ 1:21
11அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.ரோம 2:17 ரோம 3:29 ரோம 3:30 1சாமு 2:1 சங் 32:11 சங் 33:1 சங் 43:4 சங் 104:34 சங் 149:2 ஏசா 61:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 லூக் 1:46 கலா 4:9 கலா 5:22 பிலிப் 3:1 பிலிப் 3:3 பிலிப் 4:4 1பேது 1:8
12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.ரோம 5:19 ஆதி 3:6
13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை.ஆதி 4:7-11 ஆதி 6:5 ஆதி 6:6 ஆதி 6:11 ஆதி 8:21 ஆதி 13:13 ஆதி 18:20 ஆதி 19:4 ஆதி 19:32 ஆதி 19:36 ஆதி 38:7 ஆதி 38:10
14ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.ரோம 5:17 ரோம 5:21 ஆதி 4:8 ஆதி 5:5-31 ஆதி 7:22 ஆதி 19:25 யாத் 1:6 எபிரெ 9:27
15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பவரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.ரோம 5:16 ரோம 5:17 ரோம 5:20 ஏசா 55:8 ஏசா 55:9 யோவா 3:16 யோவா 4:10
16இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.ஆதி 3:6-19 கலா 3:10 யாக் 2:10
17மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?ரோம 5:12 ஆதி 3:6 ஆதி 3:19 1கொரி 15:21 1கொரி 15:22 1கொரி 15:49
18ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.ரோம 5:12 ரோம 5:15 ரோம 5:19 ரோம 3:19 ரோம 3:20
19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.ஏசா 53:10-12 தானி 9:24 2கொரி 5:21 எபே 1:6 வெளிப் 7:9-17
20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது: ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.ரோம 3:19 ரோம 3:20 ரோம 4:15 ரோம 6:14 ரோம 7:5-13 யோவா 15:22 2கொரி 3:7-9 கலா 3:19-25
21இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது: அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.ரோம 5:14 ரோம 6:12 ரோம 6:14 ரோம 6:16

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.