ஏசாயா 28:15-18 - WCV
15
15”நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்: பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்: வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்” என்று சொன்னீர்கள்.
16
ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்: அது பரிசோதிக்கப்பட்ட கல்: விலையுயர்ந்த மூலைக்கல்: உறுதியான அடித்தளமாய் அமையும் கல்:”நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்.”
17
நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்: மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.
18
சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்: பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது: பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.