இணை வசன வேதாகமம்

ரோமர் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?ரோம 3:5
2ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?ரோம 3:1-4
3திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?ரோம 6:16 ரோம 7:1 1கொரி 3:16 1கொரி 5:6 1கொரி 6:2 1கொரி 6:3 1கொரி 6:9 1கொரி 6:15 1கொரி 6:16 1கொரி 6:19 1கொரி 9:13 1கொரி 9:24 2கொரி 13:5 யாக் 4:4
4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.ரோம 6:3 கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 3:1-3 1பேது 3:21
5அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.ரோம 6:8-12 எபே 2:5 எபே 2:6 பிலிப் 3:10 பிலிப் 3:11
6நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும்.கலா 2:20 கலா 5:24 கலா 6:14 எபே 4:22 கொலோ 3:5 கொலோ 3:9 கொலோ 3:10
7ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?ரோம 6:2 ரோம 6:8 ரோம 7:2 ரோம 7:4 கொலோ 3:1-3 1பேது 4:1
8கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.ரோம 6:3-5 2தீமோ 2:11 2தீமோ 2:12
9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.சங் 16:9-11 அப் 2:24-28 எபிரெ 7:16 எபிரெ 7:25 எபிரெ 10:12 எபிரெ 10:13 வெளிப் 1:18
10அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.ரோம 8:3 2கொரி 5:21 எபிரெ 9:26-28 1பேது 3:18
11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.ரோம 8:18
12ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.ரோம 6:16 ரோம 5:21 ரோம 7:23 ரோம 7:24 எண் 33:55 உபா 7:2 யோசு 23:12 யோசு 23:13 நியா 2:3 சங் 19:13 சங் 119:133
13நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்: மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்: கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.ரோம 6:16 ரோம 6:19 ரோம 7:5 ரோம 7:23 1கொரி 6:15 கொலோ 3:5 யாக் 3:5 யாக் 3:6 யாக் 4:1
14பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது: ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல: மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.ரோம 6:12 ரோம 5:20 ரோம 5:21 ரோம 8:2 சங் 130:7 சங் 130:8 மீகா 7:19 மத் 1:21 யோவா 8:36 தீத் 2:14 எபிரெ 8:10
15அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது.ரோம 3:9
16எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்: நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்.ரோம 6:13 யோசு 24:15 மத் 6:24 யோவா 8:34 2பேது 2:19
17முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள்.ரோம 1:8 1நாளா 29:12-16 எஸ்றா 7:27 மத் 11:25 மத் 11:26 அப் 11:18 அப் 28:15 1கொரி 1:4 எபே 1:16 பிலிப் 1:3-5 கொலோ 1:3 கொலோ 1:4 1தெச 1:2 1தெச 1:3 1தெச 3:9 2தெச 1:3 2தீமோ 1:3-5 பிலேமோ 1:4 2யோவா 1:4 3யோவா 1:3
18பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.ரோம 6:14 சங் 116:16 சங் 119:32 சங் 119:45 லூக் 1:74 லூக் 1:75 யோவா 8:32 யோவா 8:36 1கொரி 7:21 1கொரி 7:22 கலா 5:1 1பேது 2:16
19நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.ரோம 3:5 1கொரி 9:8 1கொரி 15:32 கலா 3:15
20நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை.ரோம 6:16 ரோம 6:17 யோவா 8:34
21அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப்படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா?ரோம 7:5 நீதி 1:31 நீதி 5:10-13 நீதி 9:17 நீதி 9:18 ஏசா 3:10 எரே 17:10 எரே 44:20-24 கலா 6:7 கலா 6:8
22ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்: இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு.ரோம 6:14 ரோம 6:18 ரோம 8:2 யோவா 8:32 2கொரி 3:17 கலா 5:13
23பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு: மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.ரோம 5:12 ஆதி 2:17 ஆதி 3:19 ஏசா 3:11 எசே 18:4 எசே 18:20 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 3:10 கலா 6:7 கலா 6:8 யாக் 1:15 வெளிப் 21:8

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.