1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது: ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது: | லேவி 5:15 லேவி 5:17 எண் 15:22-29 உபா 19:4 1சாமு 14:27 சங் 19:12 1தீமோ 1:13 எபிரெ 5:2 எபிரெ 9:7 |
3 | அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக. | லேவி 8:12 லேவி 21:10-12 யாத் 29:7 யாத் 29:21 |
4 | சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார். | லேவி 1:3 யாத் 29:10 யாத் 29:11 |
5 | அருள்பொழிவு பெற்ற குரு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, | லேவி 4:16 லேவி 4:17 லேவி 16:14 லேவி 16:19 எண் 19:4 1யோவா 1:7 |
6 | அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்குதிரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக. | லேவி 4:17 லேவி 4:25 லேவி 4:30 லேவி 4:34 லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:14 லேவி 16:19 எண் 19:4 |
7 | குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார்.காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார். | லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:18 யாத் 30:1-10 சங் 118:27 எபிரெ 9:21-15 |
8 | பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார். | லேவி 4:19 லேவி 4:26 லேவி 4:31 லேவி 4:35 லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-16 லேவி 7:3-5 லேவி 16:25 ஏசா 53:10 யோவா 12:27 |
9 | மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை |
10 | நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார். |
11 | காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும் | லேவி 4:21 லேவி 6:30 லேவி 8:14-17 லேவி 9:8-11 லேவி 16:27 யாத் 29:14 எண் 19:5 சங் 103:12 எபிரெ 13:11-13 |
12 | காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும்.சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும். | லேவி 13:46 எண் 5:3 எண் 15:35 எண் 19:3 |
13 | இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால், | லேவி 4:1 லேவி 4:2 லேவி 5:2-5 லேவி 5:17-5 எண் 15:24-29 யோசு 7:11 யோசு 7:24-26 1தீமோ 1:13 எபிரெ 10:26-29 |
14 | அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும். |
15 | மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள்.ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும். | யாத் 24:1 யாத் 24:9 எண் 11:16 எண் 11:25 உபா 21:3-9 |
16 | அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார். | லேவி 4:5-12 எபிரெ 9:12-14 |
17 | குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார். | லேவி 4:6 லேவி 4:7 |
18 | சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார். |
19 | காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார். | லேவி 4:8-10 லேவி 4:26-10 லேவி 4:31-10 லேவி 4:35-10 லேவி 5:6 லேவி 6:7 லேவி 12:8 லேவி 14:18 எண் 15:25 சங் 22:14 எபிரெ 1:3 எபிரெ 9:14 |
20 | பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர். | லேவி 4:26 லேவி 1:4 லேவி 5:6 லேவி 6:7 லேவி 12:8 லேவி 14:18 யாத் 32:30 எண் 15:25 தானி 9:24 ரோம 5:11 கலா 3:13 எபிரெ 1:3 எபிரெ 2:17 எபிரெ 9:14 எபிரெ 10:10-12 1யோவா 1:7 1யோவா 2:2 வெளிப் 1:5 |
21 | முன்னைய காளையை எரித்ததுபோல இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக.இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி. | லேவி 4:11 லேவி 4:12 |
22 | தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப்பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால், | யாத் 18:21 எண் 16:2 2சாமு 21:1-3 2சாமு 24:10-17 |
23 | தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது, வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான். | லேவி 4:14 லேவி 5:4 2இரா 22:10-13 |
24 | அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து, எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில், ஆண்டவருக்குமுன் அந்தக்கிடாயைப் பலிகொடுப்பான்: இது பாவம் போக்கும் பலி. | லேவி 4:4-35 ஏசா 53:6 |
25 | குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து எலிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார். | லேவி 4:7 லேவி 4:18 லேவி 4:30 லேவி 4:34 லேவி 8:10 லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:18 ஏசா 40:21 ரோம 3:24-26 ரோம 8:3 ரோம 8:4 ரோம 10:4 எபிரெ 2:10 எபிரெ 9:22 |
26 | அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார்.குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவன் மன்னிப்புப் பெறுவான். | லேவி 4:8-10 லேவி 4:35-10 |
27 | பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால், | லேவி 4:2 எண் 15:27 |
28 | தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது, அவர் செய்த பாவத்தை முன்னிட்டு, பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார். | லேவி 4:23 லேவி 4:32 லேவி 5:6 ஆதி 3:15 ஏசா 7:14 எரே 31:22 ரோம 8:3 கலா 4:4 கலா 4:5 |
29 | பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து, எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார். | லேவி 4:4 லேவி 4:15 லேவி 4:24 லேவி 4:33 எபிரெ 10:4-14 |
30 | குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து, எரிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்விவிடுவார். | லேவி 4:25 லேவி 4:34 ஏசா 42:21 ரோம 8:3 ரோம 8:4 ரோம 10:4 எபிரெ 2:10 |
31 | அதன் கொழுப்பு முழவதையும் நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார். | லேவி 4:8-10 லேவி 4:19-10 லேவி 4:26-10 லேவி 4:35-10 லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-16 |
32 | பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால் அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும். | லேவி 4:28 லேவி 3:6 லேவி 3:7 லேவி 5:6 யாத் 12:3 யாத் 12:5 ஏசா 53:7 லூக் 1:35 யோவா 1:29 யோவா 1:36 எபிரெ 7:26 1பேது 1:18-20 1பேது 2:22 1பேது 2:24 1பேது 3:18 வெளிப் 5:6 வெளிப் 5:8 வெளிப் 5:9 |
33 | அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும்.அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும். | லேவி 4:4 லேவி 4:29-31 |
34 | குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார். | லேவி 4:25 லேவி 4:30 ஏசா 42:21 யோவா 17:19 ரோம 8:1 ரோம 8:3 ரோம 10:4 2கொரி 5:21 எபிரெ 2:10 எபிரெ 10:29 1பேது 1:18-20 1பேது 2:24 1பேது 3:18 |
35 | அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து, எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார். இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக் குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார். | லேவி 1:1-6 |